மேலும் அறிய

Crime : ’துபாயில் வேலை வாங்கித் தரேன்..’ சினிமா பாணியில் பொறியாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி , ஒருவர் கைது

துபாயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த திருச்சி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மாயவேல் (வயது 32). எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எம்.பி.ஏ. பட்டதாரியான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, ஓலையூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் மதன்குமார் என்கிற மரிய ரஞ்சித் (32) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு நண்பராக பழகியுள்ளார். 

மாயவேலிடம் மரிய ரஞ்சித் துபாய் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். ஆனால் மரிய ரஞ்சித் கூறியபடி மாயவேலுக்கு துபாய் நாட்டில் வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி மாயவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்), போலீசார் சதீஷ்குமார், வேல்முருகன், முத்துசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மரிய ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர்.
Crime : ’துபாயில் வேலை வாங்கித் தரேன்..’ சினிமா பாணியில் பொறியாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி , ஒருவர் கைது

இந்த நிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த மரிய ரஞ்சித்தை நேற்று முன்தினம் கைது செய்த சைபர் கிரைம் போலீசார் நேற்று பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். மரிய ரஞ்சித்திடம் இருந்து ரூ.4 லட்சம், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மரியரஞ்சித் பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், வேலை வாய்ப்பு தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் ஆகியவற்றில் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடலாம்" என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Embed widget