மேலும் அறிய

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 25 அன்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த நபரின் பெயர் மோகாம் சிங் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது மகன் ராஜேஷ் சிங் அவரது காப்பீட்டுப் பணமான சுமார் 4 லட்சம் ரூபாய்க்காக அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பாரத்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தன் தந்தை இறந்தால் சுமார் 4 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ராஜேஷ் சிங் தன் தந்தையின் பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். மேலும், இந்தக் கொலையை விபத்து போல மாற்றுவதற்காக முயன்றுள்ளார் ராஜேஷ் சிங். எனினும் மூன்று குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

ராஜஸ்தானின் கோசி பகுதியில் இந்த மூவரும் ஒளிந்து கொள்ள முயன்ற போது, அப்பகுதியில் வந்த காவல்துறை ரோந்து வாகனம் இவர்களைக் கைது செய்துள்ளது. `நாங்கள் ரோந்து சென்ற போது, மூவரும் மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டனர். கேள்வி எழுப்பிய போதும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதில் வந்தது. எனவே பொது அமைதியைக் குலைப்பதாக அவர்களைக் கைது செய்தோம்’ என்று காவல்துறையினர் இதுகுறித்து கூறியுள்ளனர்.

மறுநாள் அதே கோசி பகுதியின் சாலையில் மோகாம் சிங்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றப்பட, காவல்துறையினர் அதை விபத்து என்று கருதியுள்ளனர். எனினும், தலையில் சில காயங்களைத் தவிர பின்பக்கமோ, தோள்களிலோ எந்தக் காயமும் இல்லை என்பதால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். 

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

காவல் ஆய்வாளர் ராஜேஷ் பதக் இதுகுறித்து கூறிய போது, `மோகாம் சிங் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்ததில், அவருக்கு அந்தக் கிராமத்திலேயே மகன் இருப்பது தெரிய வந்தது. உடனே நாங்கள் மறைந்த மோகாம் சிங்கின் மகன் ராஜேஷ் சிங்கைக் கண்டுபிடித்தோம். ஆனால் பொது அமைதியை சீர்குலைத்ததற்காக அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேகத்துடன் அவரை விசாரித்ததில், தான் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்’ எனக் கூறியுள்ளார். 

25 வயதான விஜயேந்திரா, 26 வயதான கன்ஹா ஆகிய இருவரும் ராஜேஷ் சிங்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், ராஜேஷ் சிங்கின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது சகோதரரின் மனைவிக்குக் காப்பீட்டுத் திட்டத்தின் பணம் கிடைத்தது. இதனால் தன் தந்தையின் பெயரில் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்து, அவரைக் கொன்று பணத்தைப் பெற முயற்சி செய்ததாக ராஜேஷ் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget