மேலும் அறிய

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 25 அன்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த நபரின் பெயர் மோகாம் சிங் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது மகன் ராஜேஷ் சிங் அவரது காப்பீட்டுப் பணமான சுமார் 4 லட்சம் ரூபாய்க்காக அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பாரத்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தன் தந்தை இறந்தால் சுமார் 4 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ராஜேஷ் சிங் தன் தந்தையின் பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். மேலும், இந்தக் கொலையை விபத்து போல மாற்றுவதற்காக முயன்றுள்ளார் ராஜேஷ் சிங். எனினும் மூன்று குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

ராஜஸ்தானின் கோசி பகுதியில் இந்த மூவரும் ஒளிந்து கொள்ள முயன்ற போது, அப்பகுதியில் வந்த காவல்துறை ரோந்து வாகனம் இவர்களைக் கைது செய்துள்ளது. `நாங்கள் ரோந்து சென்ற போது, மூவரும் மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டனர். கேள்வி எழுப்பிய போதும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதில் வந்தது. எனவே பொது அமைதியைக் குலைப்பதாக அவர்களைக் கைது செய்தோம்’ என்று காவல்துறையினர் இதுகுறித்து கூறியுள்ளனர்.

மறுநாள் அதே கோசி பகுதியின் சாலையில் மோகாம் சிங்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றப்பட, காவல்துறையினர் அதை விபத்து என்று கருதியுள்ளனர். எனினும், தலையில் சில காயங்களைத் தவிர பின்பக்கமோ, தோள்களிலோ எந்தக் காயமும் இல்லை என்பதால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். 

Insurance Crime | 4 லட்ச ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

காவல் ஆய்வாளர் ராஜேஷ் பதக் இதுகுறித்து கூறிய போது, `மோகாம் சிங் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்ததில், அவருக்கு அந்தக் கிராமத்திலேயே மகன் இருப்பது தெரிய வந்தது. உடனே நாங்கள் மறைந்த மோகாம் சிங்கின் மகன் ராஜேஷ் சிங்கைக் கண்டுபிடித்தோம். ஆனால் பொது அமைதியை சீர்குலைத்ததற்காக அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேகத்துடன் அவரை விசாரித்ததில், தான் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்’ எனக் கூறியுள்ளார். 

25 வயதான விஜயேந்திரா, 26 வயதான கன்ஹா ஆகிய இருவரும் ராஜேஷ் சிங்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், ராஜேஷ் சிங்கின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது சகோதரரின் மனைவிக்குக் காப்பீட்டுத் திட்டத்தின் பணம் கிடைத்தது. இதனால் தன் தந்தையின் பெயரில் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்து, அவரைக் கொன்று பணத்தைப் பெற முயற்சி செய்ததாக ராஜேஷ் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget