மேலும் அறிய

திருச்சி அருகே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி - இளைஞர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டத்தில் 15 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இந்த வாலிபருக்கும், மற்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 2021 நவம்பர் 10-ந் தேதி திருமணம் நடந்தது. புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு அந்த வாலிபர் தாலி கட்டினார். பின்னர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். இந்த நிலையில் ஓரிரு வாரங்களில் பக்குவப்படாத வயதில் திருமண வாழ்க்கையை தொடங்கிய சிறுமிக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபர் சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து மணமகளாக சென்ற 20 நாட்களில் கணவரை பிரிந்து அந்த சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருவை சுமந்த அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனே அவரின் தாயார் இரவு 7 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கே டாக்டர் இல்லை. வெளியில் சென்றுள்ள டாக்டர் வருவதற்கு இரவு 10 மணி ஆகும் என அங்கு பணியில் இருந்த நர்சுகள் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வெளியே சிறுமி காத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனை அருகாமையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் சென்று சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.


திருச்சி அருகே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி - இளைஞர் போக்சோவில் கைது

பின்னர் குழந்தையை அங்கேயே அனாதையாக போட்டுவிட்டு தாயும் மகளும் தப்பிச் சென்றனர். இதற்கிடையே இரவு 10 மணிக்கு டாக்டர் மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் நோயாளியை தேடியபோது, பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் இருந்து சிசுவின் அழுகை சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் சமூக நலத்துறை அலுவலர் விஜயா, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி அருகே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி - இளைஞர் போக்சோவில் கைது

மேலும் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற தவறான செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கடுமையாக சட்டங்களை விரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள், ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இன்றளவும் பல மாவட்டங்களில் குழந்தை திருமணம் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். எனவே முழுமையாக இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்க வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget