மேலும் அறிய

5G SIM Card: மக்களே உஷார்...! சிம் கார்டை 5Gக்கு தரம் உயர்த்துவதில் மோசடி: வங்கியில் இருந்து திருடப்படும் பணம்!

5G SIM Card: சிம் கார்டுகளை 5Gக்கு தரம் உயர்த்துவதற்காக போலி அழைப்புகள் வருவதாகவும் அதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

5G SIM Card: சிம் கார்டுகளை 5Gக்கு தரம் உயர்த்துவதற்காக போலி அழைப்புகள் வருவதாகவும் அதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் மிகவும் பிரபலான விசயங்களை மிகவும் சாதகமாக பயன்படுத்தி பொது மக்களின் பணத்தினை திருடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிகப்படியான மக்கள் தங்களின் பணத்தினை பறிகொடுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய முறையில்   ஒரு மோசடி கும்பல் பணத்தினை திருடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  

நாடு முழுவதும்  5G சேவையை இந்தாண்டு முதலே கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடக்கமாக அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களான, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் தொடங்கி வைத்தார். மேலும், அதனைத் தொடந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றூம் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தசரா பண்டிகையையொட்டி வாரணாசி பகுதிகளில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது. அதில் ரிலையன்ஸ்  ஜியோவின் ஒரு நொடிக்கு  1 GB டவுன்லோடு வேகம் இருப்பதாக அறிவித்திருந்தது. 

தற்போது 4G சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைவரையும் 5G சேவையை நோக்கி வரவேற்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். மேலும், பல்வேறு மொபைல் போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஏற்கனவே இரு நிறுவனங்களும் 5G சேவையைப் பயன்படுத்த புதிய சிம் கார்டுகள் வாங்கவோ மாற்றவோ தேவையில்லை. ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளைக் கொண்டே 5G சேவையை பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல், 4G வாடிக்கையாளார்களிடம் இருந்து பணம் திருட நூதன முறையினை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அந்த மோசடி கும்பல், 4G வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து, உங்களது சிம் கார்டை 5Gக்கு அப்கிரேடு செய்யவேண்டும் , அதனால் தற்போது உங்களது எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  வரும் அதனை சொல்லுங்கள் எனவும் கூறுகிறார்கள். அந்த ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  மூலம் வாடிக்கையாளரின் வங்கியில் இருந்து பணம் திருடப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. 

மேலும், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், சிம் கார்டை அப்கிரேடு செய்ய அதாவது தரம் உயர்த்த எந்த விதமான ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் யாரிடமும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல்லை  (OTP)  பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளர். 

அதேபோல், 5G தொலை தொடர்பு சார்ந்து பொது மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனை வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை கொண்டு வருவதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கும் போது, அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் 4G சேவையையே நாடு முழுவதும் கொண்டு வரமுடியாமல் திணறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget