மேலும் அறிய

5G SIM Card: மக்களே உஷார்...! சிம் கார்டை 5Gக்கு தரம் உயர்த்துவதில் மோசடி: வங்கியில் இருந்து திருடப்படும் பணம்!

5G SIM Card: சிம் கார்டுகளை 5Gக்கு தரம் உயர்த்துவதற்காக போலி அழைப்புகள் வருவதாகவும் அதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

5G SIM Card: சிம் கார்டுகளை 5Gக்கு தரம் உயர்த்துவதற்காக போலி அழைப்புகள் வருவதாகவும் அதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் மிகவும் பிரபலான விசயங்களை மிகவும் சாதகமாக பயன்படுத்தி பொது மக்களின் பணத்தினை திருடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிகப்படியான மக்கள் தங்களின் பணத்தினை பறிகொடுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய முறையில்   ஒரு மோசடி கும்பல் பணத்தினை திருடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  

நாடு முழுவதும்  5G சேவையை இந்தாண்டு முதலே கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடக்கமாக அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களான, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் தொடங்கி வைத்தார். மேலும், அதனைத் தொடந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றூம் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தசரா பண்டிகையையொட்டி வாரணாசி பகுதிகளில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது. அதில் ரிலையன்ஸ்  ஜியோவின் ஒரு நொடிக்கு  1 GB டவுன்லோடு வேகம் இருப்பதாக அறிவித்திருந்தது. 

தற்போது 4G சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைவரையும் 5G சேவையை நோக்கி வரவேற்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். மேலும், பல்வேறு மொபைல் போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஏற்கனவே இரு நிறுவனங்களும் 5G சேவையைப் பயன்படுத்த புதிய சிம் கார்டுகள் வாங்கவோ மாற்றவோ தேவையில்லை. ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளைக் கொண்டே 5G சேவையை பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல், 4G வாடிக்கையாளார்களிடம் இருந்து பணம் திருட நூதன முறையினை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அந்த மோசடி கும்பல், 4G வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து, உங்களது சிம் கார்டை 5Gக்கு அப்கிரேடு செய்யவேண்டும் , அதனால் தற்போது உங்களது எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  வரும் அதனை சொல்லுங்கள் எனவும் கூறுகிறார்கள். அந்த ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  மூலம் வாடிக்கையாளரின் வங்கியில் இருந்து பணம் திருடப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. 

மேலும், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், சிம் கார்டை அப்கிரேடு செய்ய அதாவது தரம் உயர்த்த எந்த விதமான ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் யாரிடமும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல்லை  (OTP)  பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளர். 

அதேபோல், 5G தொலை தொடர்பு சார்ந்து பொது மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனை வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை கொண்டு வருவதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கும் போது, அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் 4G சேவையையே நாடு முழுவதும் கொண்டு வரமுடியாமல் திணறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget