மேலும் அறிய

Crime: போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று மோசடி - 3 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சத்துக்கு வாகன கடன் பெற்று மோசடி- முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் கிளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வரவு மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெயகண்ணன். இதே நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் மாதம் வரை கண்டமங்கலம் அருகே துலுக்கநத்தம் கிராமத்தைச், சேர்ந்த சேகரின் மகன் குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது, 10.10.2019 அன்று மயிலம் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு டிராக்டர் டிப்பர் வாகனத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு வாகன கடன் வழங்கியுள்ளார். அந்தக் கடனை பெற்ற ஏழுமலை, சரியாக கடன் தொகையைத் திருப்பி செலுத்தாததால், அவரிடம் சென்று நிதி நிறுவன ஊழியர்கள் கேட்டனர்.

அதற்கு லாரி வாங்கி விற்கும் தொழில் செய்யும் திண்டிவனம் அருகே விநாயகாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஏற்கனவே 3 வாகனங்களை விற்றபோது, அவருக்கு பழக்கமான மேலாளர் குமாரும் சேர்ந்து, ஏழுமலை பெயரில் பெற்ற வாகன கடன் தொகை ரூ.12 லட்சத்தை பெற்று, அந்த தொகையை நிதி நிறுவனத்திற்கு செலுத்தாமல், ஈஸ்வரனின் மகன் கோபிகண்ணனின் வங்கி கணக்கிற்கு செலுத்தி, கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து, தற்போதைய கிளை மேலாளரான ஜெயகண்ணன், ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் முன்னாள் மேலாளர் குமார் மற்றும் அவருக்கு தெரிந்த ஈஸ்வரன், அவரது மகன் கோபிகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுசதி செய்து, வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை போலியாக தயார் செய்து, தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிதான் வாகன கடன் ரூ.12 லட்சத்தை பெற்றதாக, ஏழுமலை கூறினார். அப்படியானால், தற்போது அந்த வாகனம் எங்கு உள்ளது என்றும், வாகன கடனை திருப்பி செலுத்தும்படியும் ஜெயகண்ணன் கூறினார்.

அதற்கு கடன் தொகையை செலுத்த முடியாது என்று ஏழுமலை கூறியதோடு, ஜெயகண்ணனை அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜெயகண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்புகார்களை ஆன்லைன் செய்தார். அதன்பேரில், ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, குமார், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget