மேலும் அறிய

அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 11ம் வகுப்பு மாணவர் பலி - நாமக்கல்லில் சோகம்.

அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பதினோராம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நவலப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளியில் நேற்று மாலை ஆகாஷ் மற்றும் அவரது வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த சண்டையில் ஆகாசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆகாஷ் உடனடியாக பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆகாசை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் எருமப்பட்டி காவல்துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில், நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் புஷ்ப ராஜன், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ள மைதானத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அனைத்து மாணவர்களும் பள்ளியின் வகுப்பறையில் இருந்து மைதானத்திற்கு வந்து கொண்டுள்ளனர். அப்போது ஆகாஷ் வகுப்பிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வகுப்பறையின் வாசலில் விடப்பட்டிருந்த அவரது செருப்பை காணவில்லை. இதனால் கோபமடைந்த ஆகாஷ், தனது செருப்பை யார் எடுத்து ஒளித்து வைத்தது என திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆகாஷ் வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவர் நான் தான் செருப்பை எடுத்து ஒழித்து வைத்துள்ளதாகவும், எதற்கு திட்டுகிறாய் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென இருவரும் அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் அடித்துக் கொண்டதில் ஆகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆகாஷ் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆகாஷை தாக்கிய மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பதினோராம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget