Crime : விளையாட்டு வினையானது.. 12-ஆம் வகுப்பு மாணவனை கொலைசெய்த 11-ஆம் வகுப்பு மாணவன்
விளையாட்டின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவனை 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சியை சேர்ந்தவர் திருமுருகன் (17). இவர் மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மே மாதம், வழக்கம்போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவுக்கார பையனான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், இவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தபோது, திருமுருகனுக்கும் அவருடைய உறவுக்கார பையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த மாணவன், திருமுருகனை ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு திருமுருகன் மீது ஏற்பட்ட கோபம் ஒருகட்டத்தில் வெறியாக மாறியுள்ளது.
அந்த மாணவன் திருமுருகன் தன்னைத் தாக்கியது குறித்து தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுடன் சேர்ந்த கூட்டாளிகள் திருமுருகனைக் கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 26- ஆம் தேதி, திருமுருகன் வழக்கம்போல் பள்ளி முடித்து அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மரக்குளம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே திருமுருகன் சென்றுகொண்டிருந்த போது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் இருந்த முன்விரோதம் கொண்ட மாணவன், திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திருமுருகனின் தலையில் வெட்டியுள்ளனர். மேலும், பழிக்குப் பழி வாங்கிய மாணவன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார், திருமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க,
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















