மேலும் அறிய

Crime : விளையாட்டு வினையானது.. 12-ஆம் வகுப்பு மாணவனை கொலைசெய்த 11-ஆம் வகுப்பு மாணவன்

விளையாட்டின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவனை 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சியை சேர்ந்தவர் திருமுருகன் (17).  இவர் மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மே மாதம், வழக்கம்போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவுக்கார பையனான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், இவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தபோது,  திருமுருகனுக்கும் அவருடைய உறவுக்கார பையனுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த மாணவன், திருமுருகனை ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு திருமுருகன் மீது ஏற்பட்ட கோபம் ஒருகட்டத்தில் வெறியாக மாறியுள்ளது. 

அந்த மாணவன் திருமுருகன் தன்னைத் தாக்கியது குறித்து தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுடன் சேர்ந்த கூட்டாளிகள் திருமுருகனைக் கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 26- ஆம் தேதி,  திருமுருகன் வழக்கம்போல் பள்ளி  முடித்து அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மரக்குளம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே திருமுருகன் சென்றுகொண்டிருந்த போது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.

அந்த கூட்டத்தில் இருந்த முன்விரோதம் கொண்ட மாணவன், திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திருமுருகனின் தலையில் வெட்டியுள்ளனர். மேலும், பழிக்குப் பழி வாங்கிய மாணவன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார், திருமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,   முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க,

Chennai Tirunelveli : ஹேப்பி நியூஸ் மக்கா..சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..எப்போது தெரியுமா?

Supreme Court: "அங்கு நடக்குது இங்கு நடக்குதுன்னு நியாயபடுத்தாதீங்க" மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைப்பு செய்திகள்

பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget