மேலும் அறிய

Crime : பிறப்புறுப்பில் கம்பியை திணித்து சித்திரவதை..! 10 வயது சிறுவன் பரிதாப மரணம்..! சக நண்பர்கள் கொடூரம்..!

டெல்லியில் 10 வயது சிறுவனை சக வயதுடைய நண்பர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் உறவினர் உட்பட மூன்று நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதுடன் கொடூர தாக்குதலுக்கு ஆளான 10 வயது சிறுவன் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில், சம்பந்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் 10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வடகிழக்கு டெல்லியின் நியூ சீலம்பூர் பகுதியில் வசிப்பவர்கள். கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் அளவுக்கு சிறுவனின் காயங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் இருந்து கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 10 வயதுடைய ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 22ம் தேதி சீலம்பூர் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோரை சந்தித்தது. ஆனால், அவர்கள் வாக்குமூலம் கொடுக்க மறுத்துவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

அப்போது குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில் பெண் ஒருவரிடம் இருந்து தனது மகனின் அந்தரங்க உறுப்புகளில் கம்பியை சொருகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. நான்கு நாட்களாக குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வராததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 24 ஆம் தேதி வரை குடும்பத்தினர் வாக்குமூலம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு காவல்துறையினர் மருத்துவ ஆலோசனையை ஏற்பாடு செய்திருந்தனர். அதில்தான், தன்னுடைய மகன் அவரது நண்பர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் ஒப்பு கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் கடன் வாங்கியதாகவும் சரியான நேரத்தில், அதை திருப்பி செலுத்தாததால் இப்படி செய்ததாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனது மகனை செங்கல் மற்றும் கம்பிகளை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய இரண்டு சிறுவர்கள், உறவினர் உட்பட, கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் போலீசார் மூன்றாவது சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Embed widget