மேலும் அறிய

Crime : பிறப்புறுப்பில் கம்பியை திணித்து சித்திரவதை..! 10 வயது சிறுவன் பரிதாப மரணம்..! சக நண்பர்கள் கொடூரம்..!

டெல்லியில் 10 வயது சிறுவனை சக வயதுடைய நண்பர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் உறவினர் உட்பட மூன்று நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதுடன் கொடூர தாக்குதலுக்கு ஆளான 10 வயது சிறுவன் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில், சம்பந்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் 10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வடகிழக்கு டெல்லியின் நியூ சீலம்பூர் பகுதியில் வசிப்பவர்கள். கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் அளவுக்கு சிறுவனின் காயங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் இருந்து கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 10 வயதுடைய ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 22ம் தேதி சீலம்பூர் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோரை சந்தித்தது. ஆனால், அவர்கள் வாக்குமூலம் கொடுக்க மறுத்துவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

அப்போது குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில் பெண் ஒருவரிடம் இருந்து தனது மகனின் அந்தரங்க உறுப்புகளில் கம்பியை சொருகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. நான்கு நாட்களாக குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வராததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 24 ஆம் தேதி வரை குடும்பத்தினர் வாக்குமூலம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு காவல்துறையினர் மருத்துவ ஆலோசனையை ஏற்பாடு செய்திருந்தனர். அதில்தான், தன்னுடைய மகன் அவரது நண்பர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் ஒப்பு கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் கடன் வாங்கியதாகவும் சரியான நேரத்தில், அதை திருப்பி செலுத்தாததால் இப்படி செய்ததாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனது மகனை செங்கல் மற்றும் கம்பிகளை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய இரண்டு சிறுவர்கள், உறவினர் உட்பட, கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் போலீசார் மூன்றாவது சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget