மேலும் அறிய

Cryptocurrency : `க்ரிப்டோகரன்சி மூலமாக 135 கோடி ரூபாய் மோசடி!’ - நாடாளுமன்றத்தில் அறிவித்த இணை அமைச்சர்!

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கான கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கத் திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கான கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கத் திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசு தரப்பில் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்துள்ளார். 

மேலும், க்ரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்கள் மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்த கொள்கை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட போது, இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, `மத்திய அரசு, ரிசர்வ் வங்கியும் வாடிக்கையாளர், முதலீட்டாளர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்துபவர்களுக்கு அதுதொடர்பாக இருக்கும் பொருளாதார, நிதி, நிர்வாக, சட்ட சிக்கல்களும், பாதுகாப்புக் குறைபாடுகளும் ஏற்படுவது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது’ எனக் கூறியுள்ளார். 

நாடு முழுவதும் க்ரிப்டோ கரன்சி கறுப்புப் பணப் பரிமாற்ற விவகாரங்களில் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இணையக் குற்றவாளிகளால் க்ரிப்டோ கரன்சி பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகளிடம் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். `மத்திய அமலாக்கத்துறை சார்பில், இதுவரை பண மோசடி வழக்கின் கீழ் கறுப்புப் பணப் பரிமாற்றத்திற்காக க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தியதாக 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார். 

மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பதன்படி, சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான குற்ற நடவடிக்கைகள் க்ரிப்டோ கரன்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை இதுவரை கண்டறிந்துள்ளது. 

மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, `அமலாக்கத்துறை இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளில், சில பரிவர்த்தனைகளில் கறுப்புப் பணத்தைப் பரிமாற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சிலரும், அவர்களது இந்தியக் கூட்டாளிகளும் ஈடுபட்டுள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார். 

`2020ஆம் ஆண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட பணத்தை சில வெளிநாட்டு நிறுவனங்களுக்காக க்ரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பண மோசடி விவகாரங்களில் இதுவரை சுமார் 135 கோடி ரூபாய் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

இந்த வழக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் எதிர்கொள்ளப்பட்டு வருவதாக இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget