மேலும் அறிய

Apple Card Pay: பலே ப்ளான்.. இந்தியாவில் கிரெடிட் கார்ட், யுபிஐ-யில் களமிறங்கும் ஆப்பிள் நிறுவனம்?

தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கிரெடிட் கார்ட் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கிரெடிட் கார்ட் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் விரும்பும் ஆப்பிள் சாதனங்கள்:

உலகளவில் தரமான தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் சாதனங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தான், பயனாளர்கள் ஆப்பிள் சாதனங்களை அதிகம் விரும்பி வாங்க முக்கிய காரணம்.

இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் இந்தியாவில், இரண்டு நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பங்கேற்றார். அந்த வருகையின் போது, பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆப்பிள் கிரெடிட் கார்ட்?

அந்த வகையில், எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சஷிதர் ஜெகதீஷனையும், டிம் குக் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, இந்தியாவில்  "ஆப்பிள் கார்டு" என அழைக்கப்படும் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த டிம் குக் வங்கிகள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஆப்பிள் பே எனப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்குவதற்காக, இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தீவிர ஆலோசனை:

நிதித்துறை சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் ஆப்பிள் நிறுவனம் விசாரித்து வருவதாக தெரிகிறது. அதன்படி, வங்கியுடன் சேர்ந்து கோ-பிராண்ட் பெயரில் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதற்கு என ஏற்கனவே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள் எனவும், ஆப்பிள் நிறுவனத்திற்கு என சிறப்பு சலுகை எதுவும் வழங்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் கிரெடிட் கார்ட் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் வழங்க ஆப்பிள் நிறுவனம் அனுமதி பெற்றால், அதன் வணிகம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, சாதனங்களுக்கான சலுகைகள் மற்றும் மாதத்தவணை அடிப்படையில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்வது போன்றவற்றின் மூலமும், ஆப்பிள் நிறுவனம் தனது வியாபாரத்தை பெருக்கக் கூடும். 

அதிகரிக்கும் பணபரிமாற்றம் சேவை:

இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மொபைல் போன்கள் மூலம் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வேகமாக பணம் செலுத்த UPI அனுமதிக்கிறது. மொபைல் போன்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது

பெருநிறுவனங்களின் பெரும் திட்டம்:

இந்நிலையில் தான் ஆப்பிள், கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பணப்பரிவர்த்தனை சேவையை தீவிரமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.  அதோடு இந்த துறையில் நீண்ட காலத்திற்கான திட்டங்களையும் கொண்டுள்ளன. அதனடிப்படையில் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணச் செயலிகளை உருவாக்கி, அதனை லாபநோக்கில் செயல்படுத்த திட்டமிடுகின்றன. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget