Share Market : இன்று சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... சரிவில் டிசிஎஸ், டெக் மகேந்திரா...
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை சரிவில் தொடங்கியுள்ளன.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை சரிவில் தொடங்கியுள்ளன.
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 211.76 புள்ளிகள் குறைந்து 61,768.96 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 57.95 புள்ளிகள் குறைந்து 18,351.70 புள்ளிகளாக உள்ளது.
Sensex declines 211.76 points to 61,768.96 in early trade; Nifty dips 57.95 points to 18,351.70
— Press Trust of India (@PTI_News) November 17, 2022
லாபம் - நஷ்டம்
ஏபிபி இந்தியா, டாடா கான்ஸ், பவர் கிரிட், ஹிரோ மொட்டோகோப், ஐசிஐசி, பாரதி ஏர்டெல், சிப்ளா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், யுபிஎல், பிரிட்டானியா,எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாடா மொட்டார்ஸ், டாடா ஸ்டீல், எச்சிஎல் டெக், கோடக் மகேந்திரா, என்டிபிசி, டிசிஎஸ், அப்போலோ மருத்துவமனை, நெஸ்டல், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
பணவீக்கம்
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்த போதிலும் வட்டி விகிதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் குறைந்து 6.77% ஆக சரிந்துள்ளது.
மீண்டும் சூடுபிடிக்கும் போர்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நோட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர் மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலி ஆக , இந்திய பங்கு சந்தைகளும் இன்று சரிவில் தொடங்கியுள்ளன.
வட்டி விகிதம் உயருமா?
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த மாதம் அக்டோபரில் உயரவில்லை. இதனால் பெடரல் வங்கி வட்டி விகிதத்தையும் பெரிதாக உயர்தாது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் வட்டிவீதம் உயர்த்தப்படும் என்பதில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் (டிசம்பர் 7) அன்று வட்டி விகிதம் குறித்து முடிவு அறிவிக்கப்படும்.
மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் இன்று காலை வார்த்தைகம் சரிவில் காணப்பட்டது.
ரூபாயின் நிலவரம்
Rupee falls 37 paise to 81.63 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 17, 2022
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 37 காசுகள் குறைந்து 81.63 ருபாயாக ஆக உள்ளது.





















