மேலும் அறிய

IRDAI To Insurers: ஒரு மணிநேரம்தான் கெடு: காசின்றி சிகிச்சை பெற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் - IRDAI

IRDAI To Insurers: மருத்துவ காப்பீடு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

IRDAI To Insurers: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய அறிவுறுத்தலின்படி, பயனாளர்கள் விரைந்து பணமின்றி சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்:

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பணமின்றி சிகிச்சையை மேற்கொள்வதற்கான பயனாளரின் கோரிக்கைக்கு ஒரு மணிநேரத்திற்குள் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாலிசிதாரருக்குத் தடையற்ற, விரைவான மற்றும் தொந்தரவில்லாத க்ளெய்ம் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு தயாரிப்புகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை முன்பு வெளியிடப்பட்ட 55 சுற்றறிக்கைகளை ரத்து செய்கிறது. இது பாலிசிதாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய சுகாதார காப்பீட்டை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று Irdai தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு மணிநேரத்திற்குள் ஒப்புதல்:

ரொக்கமில்லா அங்கீகார கோரிக்கைகளுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கவும்,  மருத்துவமனையிலிருந்து கோரிக்கை விடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான ஒப்புதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிளெய்மிற்கு ஒப்புதல் பெற அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படுவதோடு, அவசர காலங்களில் தாமதமின்றி சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

சுற்றறிக்கை வலியுறுத்தும் மற்ற வசதிகள்:

அனைத்து வயதினருக்கும், பிராந்தியங்களுக்கும், மருத்துவ நிலைமைகளுக்கும் / அனைத்து வகையான மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கும்,  காப்பீட்டாளர்கள் பரந்த தேர்வை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிம் ரொக்கமில்லா உரிமைகோரல் தீர்வுக்கான வசதியை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதற்கான இலக்கை அந்த அமைப்பு முதன்மையானதாக கொண்டுள்ளது.

நோ கிளெய்ம் போனஸ்:

பாலிசி காலத்தில் க்ளெய்ம்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதன் மூலமோ அல்லது பிரீமியம் தொகையை தள்ளுபடி செய்வதன் மூலமோ, அத்தகைய நோ க்ளைம் போனஸைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்குவதன் மூலம் காப்பீட்டாளர்கள் பாலிசிதாரர்களுக்கு வெகுமதி அளிக்கலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

முழு தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும்:

பாலிசிதாரர்களின் பயனுள்ள, திறமையான மற்றும் தடையின்றி உள்வாங்குதல், பாலிசியைப் புதுப்பித்தல், பாலிசி சேவைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்றவற்றிற்கு,  தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

க்ளெய்ம் செட்டில்மென்ட்களுக்கு, பாலிசிதாரர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும்,  காப்பீட்டாளர்கள் மற்றும் டிபிஏக்கள் மருத்துவமனைகளில் இருந்து தேவையான ஆவணங்களை சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்போது மரணம் ஏற்பட்டால், சடலத்தை உடனடியாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget