மேலும் அறிய

ஆதாருடன் இபிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி? செப்.1 கடைசி... இல்லையேல் பணம் எடுக்க, செலுத்த சிக்கல்!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎஃப் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎஃப் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணைக்காத பட்சத்தில், மாதந்தோறும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் வைப்பு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அதனால், மெத்தனம் காட்டாமல் ஆதாருடன் பிஎஃப் எண்ணை இணைத்துவிடுங்கள்.

முன்னதாக, வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் தங்களின் யுஏன் எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த அவகாசம், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதிக்குள் ஆதார் இபிஎஃப் கணக்கை இணைக்காவிட்டால் சந்தாதாரர்கள் தங்களது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இபிஎஃப் அறிவுறுத்தியுள்ளது.

சந்தாதாரர்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது இபிஎஃப் அலுவலத்திலோ ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆதாருடன் இபிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி?

1. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள் 

2. அந்தப் பக்கத்தில் உங்களின் UAN எண்ணைப் பதிவிடுங்கள். PF கணக்கை ஆன்லைன் மூலம் நிர்வகிக்க கொண்டுவரப்பட்டது தான் UAN என்ற Universal Account Number. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு UAN எண் வழங்கப்படும். இதை உங்களின் பே ஸ்லிப்பில் நிறுவனம் கொடுத்திருக்கும். இந்த எண் மூலம் தங்களுடைய PF தொடர்புடைய அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பெறலாம். 

UAN எண்ணைப் பதிவிட்டு, அத்துடன் பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.

3. உள்ளே நுழைந்தவுடன் மெனு பார் இருக்கும். அதில் "Manage" என்பதைச் சொடுக்கி, KYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்

4. KYC கிளிக் செய்தவுடன் புதிய பக்கம் ஒன்று திறக்கும். அந்தப் பக்கத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள். பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள். 

5. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும். 8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை உங்களுக்குக் கிடைக்கும். பின்னர் உங்களின் ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என்ற தகவல் வரும்.

அவ்வளவு தான் ஐந்தே எளிய முறையில் நீங்கள் ஆதார் பிஎஃப் கணக்கை இணைத்துவிடலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget