By: குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 02 Jun 2024 05:03 PM (IST)
மருத்துவ காப்பீடு திட்டங்கள் (CREDIT - Freepik)
Health Insurance: மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 15 மருத்துவ காப்பீடுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, அதில் பல இலவசமாக வழங்கப்படுகின்றன.
மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்குவதும், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கங்களின் கடமையாகும். இந்தப் பொறுப்பின் ஒரு பகுதியாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதுடன், மருத்துவக் காப்பீடும் அளித்து வருகின்றன. மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த திட்டங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கவில்லை.
ஏழை அல்லது குறைந்த வருமானம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு கிடைக்கும். மாதம் ரூ.100 செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம் அல்லது முற்றிலும் இலவசமாகவும் இந்த மருத்துவ காப்பீடுகளை பெறலாம். இந்தத் திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
1. ஆயுஷ்மான் பாரத் யோஜனா: இது இந்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டம். நாட்டின் 40% க்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இது மருந்துகள், நோயறிதல் சோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது.
2. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா: மக்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 18-70 வயதுக்கு இடைப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள அனைத்து நபர்களும் தகுதியானவர்கள். மொத்த ஊனம் அல்லது இறப்புக்கு ரூ.2 லட்சமும், பகுதி ஊனத்திற்கு ரூ.1 லட்சமும் கவரேஜ் வழங்கப்படும். இதற்கு மிக சொற்ப தொகையே பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது.
3. ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY): இந்த திட்டத்திற்கு 18-59 வயதுடையவர்கள் தகுதியுடையவர்கள். குடும்பத் தலைவர் அல்லது சம்பாதிப்பவர் இதனால் பாதுகாக்கப்படுகிறார். இயற்கையான இறப்பிற்கு ரூ.30,000, நிரந்தர ஊனத்தால் ஏற்படும் இறப்புக்கு ரூ.75,000 மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
4. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS): நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தில் பலனடையலாம். நோயறிதல் சோதனைகளும் இதில் அடங்கும்.
5. ஊழியர் மாநிலக் காப்பீட்டுத் திட்டம் (ESIC): இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவச் சேவைகளைப் பெறுகின்றனர். கவரேஜ் வேலையின் முதல் நாளிலிருந்து தொடங்குகிறது. சூழலுக்கு ஏற்ப பண பலன்களும் கிடைக்கும். 10 பேருக்கு மேல் பணிபுரியும் நிரந்தர நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
6. ஜனஸ்ரீ பீமா யோஜனா: இது 18-59 வயதுக்குட்பட்ட ஏழைகளுக்காக தொடங்கப்பட்டது. இதில் மகளிர் சுயஉதவி குழுக்கள், ஷிக்ஷா சஹாயோக் யோஜனா போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
7. யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் (UHIS): இந்தத் திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மருத்துவ சேவை பாதுகாப்பு உள்ளது.
8. டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்கியஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்ட்: ஆந்திர மாநில அரசு டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்கியஸ்ரீ அறக்கட்டளையுடன் இணைந்து நான்கு சுகாதாரத் திட்டங்களை நடத்தி வருகிறது. 1. ஏழைகளுக்கான டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்கியஸ்ரீ திட்டம், 2. வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான ஆரோக்கிய ரக்ஷா திட்டம் 3. பணிபுரியும் பத்திரிகையாளர் சுகாதாரத் திட்டம் 4. பணியாளர்கள் நலத் திட்டம் (EHS)
9. தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நலத் திட்டம்: இந்த திட்டம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை கிடைக்கிறது.
10. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்: இது தமிழ்நாடு மாநில அரசின் திட்டமாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவமனை செலவுகளை இத்திட்டத்தின் மூலம் கழிக்கலாம்.
11. யஷஸ்வினி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்: இது கர்நாடக மாநில அரசால் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். 800 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.
12. காருண்யா ஆரோக்யா திட்டம்: இது கேரள அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விலையுயர்ந்த, நீண்ட கால மற்றும் மிகவும் தீவிரமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏழை மக்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
13. மேற்கு வங்க சுகாதாரத் திட்டம்: இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். காப்பீடு தொகை ரூ.1 லட்சம் வரை.
14. மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்கிய யோஜனா: மகாராஷ்டிர அரசு ஏழைகளுக்காக, குறிப்பாக விவசாயிகளுக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
15. முதலமைச்சர் அமிர்தம் யோஜனா: இது குஜராத் அரசின் திட்டம். ஏழை மக்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். ஒரு குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளுக்கு பாலிசி கவரேஜ் வழங்குகிறது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.
ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!
EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு
EPF Account Correction: உங்க பி.எஃப்., கணக்கு விவரங்கள் தப்பா இருக்கா? - திருத்தம் செய்வது எப்படி?
Post Office Savings Scheme: போஸ்ட் ஆஃபிஸில் ஒரே ஒருமுறை முதலீடு - வட்டியாகவே ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம் - அது எப்படி?
LIC Policy: குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பா இருக்கணுமா..! எல்ஐசியின் அம்ரித்பால் பாலிசி, வருமானம் & காப்பீடு..!
Breaking News LIVE: இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது நல்லதுதான் - மதுரை ஆதீனம் பேட்டி
சசிகலா குறித்து இபிஎஸ் அதிரடி! செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒற்றை வார்த்தையில் பதில் ..!
Car Features: வேண்டும் ஆனால் அவசியமில்லை - கார்களில் உள்ள 6 முக்கிய அம்சங்கள் இதோ..! விலையும் குறையும்
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி மக்களே;தங்கம் விலை சரிவு - இன்றைய விலை நிலவரம்!