மேலும் அறிய

Paytm lay off: அதிகரிக்கும் நஷ்டம்; ஆட்குறைப்பு நடவடிக்கை -ஊழியர்களை பணி நீக்கம் செய்த Paytm

Paytm lay off:2024 ஜனவரி - மார்ச் மாத காலத்தில் பேடிஎம் ரூ.550 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

பேடிஎம் பேரண்ட் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன்ஸ் மறுசீரனைப்பின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை. 

ஒன்97 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா ஏற்கனவே பணி நீக்கம் தொடர்பாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். அதில், நிறுவனம் தொழில் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தவும் செலவினங்களை குறைக்கவும் பணி நீக்கம் செய்வதற்கான முடிவை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது பணி ஆட்களை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான ஷர்மா தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களுக்கான செலவினம் அதிகரித்துள்ளதாகவும் தொழில்நுட்பம் மற்றும் நிதி துறைகளில் அதன் முதலீடு அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதிலிருந்து ரூ.400-500 கோடி தொகை சேமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை 3,500 குறைக்கப்பட்டு 36,521 ஆக இருந்தது. விதிமுறை பின்பற்றவில்லை என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளுக்கு தடை அறிவித்ததில் இருந்து ஒன்97 நிறுவனம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு வேறு வேலைக்கு செல்வதற்கு தயாராகும் காலத்தில் அதற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாயுப்பு தகவல்களை பணி நீக்க செய்த ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கொடுக்க வேண்டிய போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதற்காக கடந்த மார்ச் 15ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதித்தது. இதனால் பேடிஎம் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 2024 ஜனவரி - மார்ச் மாத காலத்தில் இந்நிறுவனத்திற்கு ரூ.550 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஏ.ஐ. உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டும் நடவைக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 6,300 பேரை கடந்த மே மாதம் பணி நீக்கம் செய்திருந்த்து. அதற்கு முன்பு பேடிஎம் நிறுவனம் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இம்முறை எண்ணிக்கை குறிப்பிடாமல் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால பணி நீக்கம் நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.