Pan Card Holders: பான் கார்ட் உரிமையாளர்களே..! டிச.31 கடைசி தேதி, தவறினால் உங்களுக்கு சிக்கல் தான்..!
Pan Card Holders: பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க, வரும் டிசம்பர் 31ம் தேதி கடைசி தேதியாகும்.

Pan Card Holders: குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் உங்களது பான் கார்ட் செயலிழந்து விடும்.
பான் ஆதார் இணைப்பு
இன்றைய சூழலில் பான் எண் அதாவது நிரந்தர கணக்கு எண் என்பது, பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக, வேலை செய்பவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு, இது மிகவும் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. நிதி மோசடிகளைத் தடுக்கவும் இது அரசுக்கு உதவுகிறது.
இதனால்தான் மக்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கடைசி தேதி 31 டிசம்பர் 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழக்கும். இது பரிவர்த்தனைகளுடன் மற்ற சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ஏன் அவசியம்?
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், அதுசார்ந்த நிதி மோசடி வழக்குகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. பல ஃபின்டெக் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சுயவிவரங்களை உருவாக்க அங்கீகரிக்கப்படாத முறையில் பான் விவரங்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால்தான், தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, பான் மூலம் தனிப்பட்ட விவரங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வரி செலுத்துவோர் அனைவரும் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. காலக்கெடுவிற்கு முன் இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும். இது நிதி பரிவர்த்தனைகள் செய்வதில் சிரமம் உட்பட பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, உங்கள் பான்-ஆதார் இணைப்பின் நிலையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை இணைக்கவும்.
பான்-ஆதார் இணைப்பு நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
- வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (www.incometax.gov.in) செல்லவும்
- முகப்புப் பக்கத்தில் உள்ள 'Quick Links' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இணைப்பு ஆதார் நிலையை கிளிக் செய்து, பான் மற்றும் ஆதார் அட்டை எண்ணை வழங்கவும்.
உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், "உங்கள் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி திரையில் தோன்றும். இணைக்கப்படாத பட்சத்தில், “பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை” என்ற செய்தி திரையில் தோன்றலாம். இதையடுத்து, இணையதளத்தின் இடது பக்கத்தில் உள்ள விரைவு இணைப்புகள் பிரிவின் கீழ் தோன்றும் 'ஆதார் இணைப்பு' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையின் படி விவரங்களை உள்ளிட வேண்டிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இணைப்பிற்கான கட்டணம் எவ்வளவு?
30 ஜூன் 2023 வரை பான் கார்டுடன் ஆதாரை இலவசமாக இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் வைத்திருந்தது. ஆனால், இப்போது இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ரூ.500 ஆக இருந்தது, தற்போது ரூ.1 ஆயிரமாக மாறியுள்ளது. அதாவது, பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க விரும்பினால், தாமதக் கட்டணம் அல்லது அபராதமாக ரூ.1 ஆயிரம் செலுத்த வேண்டும்.
Before You Go
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
ட்ரெண்டிங் செய்திகள்























