மேலும் அறிய

Cryptocurrency : க்ரிப்டோகரன்சி விஷயத்துல இதுதான் நிலைப்பாடு: மத்திய இணை அமைச்சர் சொன்னது என்ன தெரியுமா?

க்ரிப்டோகரன்சியைக் கொண்டுவர அரசுக்கு திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

க்ரிப்டோகரன்சியைக் கொண்டுவர அரசுக்கு திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமான க்ரிப்டோகரன்சியாக `பிட்காயின்’ தோன்றியது. அதற்குப் பிறகு, பிட்காயின் கேஷ், ரிப்பிள், லைட்காயின் முதலான பல்வேறு க்ரிப்டோகரன்சிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன. தற்போதைய  2022 ஆம் ஆண்டில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான க்ரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கான சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் க்ரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு சுமார் 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை நிர்வகிக்கவோ, கட்டுப்படுத்தவோ, தடைசெய்யவோ எந்தச் சட்டமும் இல்லை. எனவே இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை வாங்கவோ, வியாபாரம் செய்யவோ, க்ரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மையம் நடத்தவோ சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. 

இந்நிலையில் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "இப்போதைக்கு இந்தியாவில் க்ரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டபூர்வ அமைப்பும் இல்லை. ரிசர்வ்வங்கியும் க்ரிப்டோகரன்சியை வெளியிடவில்லை. ஆகையால் நாம் காலம் காலமாக பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்குத்தான் மதிப்பு உள்ளது. மற்றபடி ரிசர்வ் வங்கி டிஜட்டல் கரன்சி எனப்படும் சிபிடிசி, அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்ஸி பற்றி ஆலோசித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Cryptocurrency : க்ரிப்டோகரன்சி விஷயத்துல இதுதான் நிலைப்பாடு: மத்திய இணை அமைச்சர் சொன்னது என்ன தெரியுமா?

ரிசர்வ் வங்கி சிபிடிசி, அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியைக் கொண்டு வந்தால் அதன் மூலம் ரூபாய் நோட்டுகள் மீதான அழுத்தம் தேவை குறையும் என்று கணிகப்படுகிறது.

இன்னொரு கேள்விக்கு, "கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 4,378 கோடி ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் 2020-21 காலக்கட்டத்தில் அது 4012 கோடி ரூபாயாக குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "நிலையான பங்குச்சந்தையும், சீராக இயங்கும் சந்தை கட்டமைப்புமே ஒரு நாட்டுப் பொருளாதார வளத்தின் குறியீடு. அது நம் நாட்டைப் பொறுத்தவரை இப்போது சீராகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பங்குச்சந்தைகளில் ஏற்றத்தாழ்வும் வரலாம். ஏனெனில் பங்குச்சந்தையின் போக்கு சர்வதேச அரசியல் சூழலையும் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

`க்ரிப்டோ வர்த்தம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் தொழில்துறை நிறுவனங்கள், பங்குதாரர்கள் தரப்பில் யார் ஒழுங்குமுறைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், க்ரிப்டோகரன்சியைக் கொண்டுவர அரசுக்கு திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget