மேலும் அறிய

Work From Home : வாரத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அலுவலகம் வரலாம்.. மீதி நாள் ஒர்க் ஃபிரம் ஹோம்!... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் வர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிறுவனம் மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. ஜூன் 1, முதல் இந்த ஃப்ளெக்ஸி மாடலைப் பின்பற்றுவதாக மீஷோ அறிவித்துள்ளது.

மீஷோ நிறுவனம் தனது ஊழியர்களை ஒரு நாள் அலுவலகத்திற்கு வருமாறும், மீதி நாள் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது. நிறுவன ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை மனிதவள அதிகாரி ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஒர்க் ஃபிரம் ஹாம்

கோவிட்-19 பரவி வந்த சமயத்தில் லாக்டவுன் போடப்பட்ட சமயங்களில் பல நிறுவனங்கள், கடைகள் இயங்காமல் போக நஷ்டம் வரத்துவங்கியபோது, பிரபலமடைந்த விஷயம் தான் ஒர்க் ஃபிரம் ஹோம். வீட்டிலிருந்தபடியே தனது ஊழியர்களை நிறுவனம் வேலைவாங்கும் திட்டம்தான் இது. இது பல நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் ஒரு சில வேலைகளுக்கு கடினம்தான். ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலாம் என்று கருதிய நிறுவனங்களை, அட இது நல்லாருக்கே இப்படியே கண்டின்யு பண்ணுவோம் என்று நினைக்க வைத்ததுதான் லாக்டவுன் செய்த மற்றுமொரு சாதனை. வீட்டில் இருந்து ஊழியர்கள் வேலை செய்தாலும் தொய்வின்றி இயங்கிய நிறுவனங்கள் ஒர்க் ஃபிரம் ஹாம் என்னும் திட்டத்தைப் பற்றிக்கொண்டன. 

Work From Home : வாரத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அலுவலகம் வரலாம்.. மீதி நாள் ஒர்க் ஃபிரம் ஹோம்!... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

மீஷோவின் ஃப்ளெக்ஸி மாடல்

ஆபீஸ் வாடகை, கரண்ட் பில், வைஃபை பில், செக்யூரிட்டி என்று எதுவும் இல்லாமல் வேலை சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கவனித்த நிறுவனங்களுக்கு அதுவே பழகிப்போக, ​​பல நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அலுவலகம் வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. ஜூன் 1, 2023 முதல் இந்த ஃப்ளெக்ஸி மாடலைப் பின்பற்றுவதாக மீஷோ அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்: கமல் தவறவிட்ட வாய்ப்பை அலேக்காக பிடித்து சிக்ஸர் அடித்த ரஜினி... முரட்டுக்காளை குறித்த சுவாரஸ்யங்கள்!

ஊழியர்களிடம் கருத்துக் கேட்பு

கடந்த ஒரு வருடமாக மீஷோ நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தின் கீழ்தான் இயங்கி வருகிறது. இவ்வளவு நாட்கள் வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்து வந்த ஊழியர்களிடம் அலுவலகம் திறப்பது குறித்து கருத்து கேட்டபோது அவர்களும் தங்களுக்குள் ஒரு புரிதல், இணக்கம் ஏற்படுவதற்கும், வேலையை குழுவாக முடிப்பதற்கும், விரைவாக முடிப்பதற்கும் அலுவலகம் வருவது நல்லது என்று பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளனர். அதனால் பெங்களூரில் சொத்து விலைகள் அதிகரித்து, அனைத்து நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை வேகமாகத் திறக்கும் நேரத்தில் மீஷோ தனது ஊழியர்களை (Meesho Employees) அலுவலகத்திற்கு அழைப்பதாக அறிவித்துள்ளது. கணக்கெடுப்புக்குப் பிறகே ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. 

Work From Home : வாரத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அலுவலகம் வரலாம்.. மீதி நாள் ஒர்க் ஃபிரம் ஹோம்!... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நிறுவனம் நிதியுதவி அளிக்கும்

இத்துடன் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு பல நிதி வசதிகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பெங்களூருக்கு வரும் இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பயணச் செலவு, தரகு கட்டணம், சரக்கு போக்குவரத்து, பள்ளியில் மீண்டும் சேர்க்கை மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதி ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற வசதிகளையும் நிறுவனம் வழங்கலாம் என்று தெரிகிறது. நிறுவனத்திற்குள் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, அதில் பெரும்பாலான மக்கள் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புகிறார்கள் என்றும், ஒன்றிணைந்து வேகமாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் கணக்கெடுப்பில், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய ஒப்புக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget