மேலும் அறிய

ஆகாசா ஏர்லைன்ஸை துவங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா... சறுக்குமா? சாதிக்குமா?

சில நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலவும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அடுத்த சில நாட்களிலே ஆகாசா விமான நிறுவனத்துக்கான தடையில்லாத  சான்றிதழை மத்திய அரசு வழங்கியது

ஒவ்வொரு சமயத்திலும் குறிப்பிட்ட சில துறையை சேர்ந்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும். ஐடி, பார்மா, டெலிகாம் ரியல் எஸ்டேட் குறிப்பிட்ட துறையை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் தினமும் வெளியாகி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலவும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அடுத்த சில நாட்களிலே ஆகாசா விமான நிறுவனத்துக்கான தடையில்லாத  சான்றிதழை மத்திய அரசு வழங்கியது. இதனால் ஆகாசா விமானம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். ஆகாசா குறித்தும் நாமும் தெரிந்துகொள்வோம்.

இந்தியாவின் வாரன் பபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  தொடங்கிய எஸ்என்வி ஏவியேஷன் நிறுவனத்தின் பிராண்ட் பெயர்தான் ஆகாசா. இதில் ராகேஷ் ரூ247.5 கோடியை முதலீடு செய்து 40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே இணை நிறுவனராக இருக்கிறார். மேலும் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா கோஷும் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். இது தவிர ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, கோ ஏர் (கோ பர்ஸ்ட்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய பல முக்கிய அதிகாரிகள் இதில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சிலரும் முதலீடு செய்திருக்கின்றனர் அதனால் இந்த விமான நிறுவனம் மீது எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றன.


ஆகாசா ஏர்லைன்ஸை துவங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா... சறுக்குமா? சாதிக்குமா?

ULCC என்றால் என்ன?

இந்த நிறுவனம் மிகவும் குறைந்த விலை பிரிவில் (ULCC _ "ultra low-cost carrier" ) செயல்படும். அடுத்தாண்டு கோடை காலத்தில் இந்தியாவில் செயல்பாட்டை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான 30 நகரங்களை இணைக்கிறது. அடுத்த சில மாதங்களில் 20 விமானங்கள் கொண்ட நிறுவனமாக செயல்பாட்டினை தொடங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் 70 விமானங்கள் கொண்ட நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானங்களை பொறுத்தவரை போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்கள் முக்கியமானவை.  இந்த நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் எந்த விமானத்தை வாங்குவது என்னும் முடிவை நிறுவனம் எடுக்கவில்லை என தெரிகிறது. ஆகாசாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஏர்பஸ் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இரு துருவ சந்தை

டெலிகாம் துறை இரு துருவ நிறுவனமாக மாறிவிட்டது. மிகப் பெரும்பான்மையான சந்தை ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது. அதேபோல விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் டாடா குழுமம் ஆகிய இரு நிறுவனங்கள் வசம் 80 சதவீத சந்தை இருக்கிறது. இந்த சூழலில் ஆகாசா என்னும் புதிய நிறுவனம் உருவாகிறது.

ஆகாசாவுக்கு சில சாதகங்களும் உள்ளன. விமானத்துறையில் உள்ள பல முக்கியமான தலைவர்கள் இருப்பதால், தலைமைக்கு பஞ்சமில்லை. தவிர தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான பைலட்கள் மற்றும் பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதால் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கும் பிரச்சினையில்லை.

சவால் என்ன?

விமான போக்குவரத்தில் 40 சதவீதத்துக்கு மேல் எரிபொருளுக்கு செலவாகிறது. ஆனால் இந்த சூழலில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்திருப்பது ஆகாசாவுக்கு சிக்கலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இண்ட்கோவின் நஷ்டம் 5806 கோடி. ஸ்பைஸ்ஜெட் நஷ்டம் 998 கோடி. இந்த சூழலில் ஆகாசா என்பது துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

தவிர 2014-ம் ஆண்டு ஏர் ஏசியா இந்தியா தொடங்கப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த நிறுவனம் பிரேக் ஈவன் நிலையை எட்டவில்லை. விஸ்தாரா நிறுவனமும் இன்னும் லாப பாதைக்கு திரும்பவில்லை. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களிலும் இண்டிகோ தவிர மற்ற நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியதில்லை. கோவிட்ட்க்கு முன்பும் கூட விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில்தான் இருந்தது.


ஆகாசா ஏர்லைன்ஸை துவங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா... சறுக்குமா? சாதிக்குமா?

விமான போக்குவரத்து துறை குறித்து பலர் நம்பிக்கையற்று உள்ளனர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த துறைக்கு புதிய நிறுவனம் தேவை. வெற்றி அடைந்தால் எப்படி வெற்றி அடைந்தது என கூறுகிறேன். தோல்வியடைந்தால் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். நம்பிக்கையாக இருக்கிறேன். தோல்விக்கும் தயராக இருக்கிறேன் என ஜுன்ஜுன்வாலா தெரிவித்திருக்கிறார்.

பங்குச்சந்தை முதலீட்டில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொட்டதெல்லாம் தங்கம்தான். ஆனால் ஆகாசாவின் வெற்றி கண்ணுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். விமான போக்குவரத்து துறையில் மற்றுமொரு நிறுவனமாக மாறுமா அல்லது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வெற்றி ஆகாசாவிலும் தொடருமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget