மேலும் அறிய

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?

34 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
நோ எலக்ட்ரிக் வாகனங்கள்
 
 
இந்நிலையில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா, என உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சென்னை தொழிற்சாலையில் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
எழுதிக் கொடுத்துவிட்டு நுழையுங்கள்
 
 திடீரென நிர்வாகம் சார்பில் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கடந்த மாதம் இறுதியில் எழுதி வாங்குவதற்காக நிர்வாகம் முயற்சி செய்ததிலிருந்து.  தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மூடுவதாக அறிவிப்பு செய்த சூழ்நிலையில், குஜராத் அரசு டாடா நிர்வாத்திற்கு கைமாற்றி கொடுத்த வகையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. 
 
34 நாள் போராட்டம்..
 
அதே போல தங்களுடைய வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு விவகாரத்தில் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 34 நாட்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள்அரசு , நிர்வாகம் ,ஊழியர்கள் ஆகியோர் தரப்புகளில் தனித்தனியே  நடைபெற்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ்  பாதிப்பில் இரண்டாம் இடம் வகுத்து வருகிறது. தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக , ஊழியர்களின் ஒரு சில கோரிக்கைக்கு கோரிக்கைக்கு நிர்வாகம் தரப்பில், ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், 34 நாட்களை கடந்து சென்றிருக்கும் எங்கள் போராட்டமானது  கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, ஜூலை மாதம் வரை உற்பத்தியை நிர்வாகம் நீடித்துள்ளது. மேலும் யாரேனும் தொழிற்ச்சாலையை வாங்குவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகிறது. இதுபோக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, எந்த வித நிபந்தனையும் இல்லாமல் தொழிலாலர்களை ஆலைக்குள் அனுமதிக்க நிர்வாகம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தீர்வு தொகை பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு உள்ளோம் எங்கள் பணிக்கு திரும்ப உள்ளோம் என தெரிவித்தனர்.
 
 
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
 
 
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்
Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்
Affordable Hybrid SUVs: ஹைப்ரிட் SUV வாங்குற பிளான் இருக்கா.? வெயிட் பண்ணுங்க; மலிவு, அதிக ரேஞ்ச்; வரவிருக்கும் சூப்பரான கார்கள்
ஹைப்ரிட் SUV வாங்குற பிளான் இருக்கா.? வெயிட் பண்ணுங்க; மலிவு, அதிக ரேஞ்ச்; வரவிருக்கும் சூப்பரான கார்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Embed widget