மேலும் அறிய

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?

34 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
நோ எலக்ட்ரிக் வாகனங்கள்
 
 
இந்நிலையில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா, என உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சென்னை தொழிற்சாலையில் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
எழுதிக் கொடுத்துவிட்டு நுழையுங்கள்
 
 திடீரென நிர்வாகம் சார்பில் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கடந்த மாதம் இறுதியில் எழுதி வாங்குவதற்காக நிர்வாகம் முயற்சி செய்ததிலிருந்து.  தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மூடுவதாக அறிவிப்பு செய்த சூழ்நிலையில், குஜராத் அரசு டாடா நிர்வாத்திற்கு கைமாற்றி கொடுத்த வகையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. 
 
34 நாள் போராட்டம்..
 
அதே போல தங்களுடைய வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு விவகாரத்தில் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 34 நாட்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள்அரசு , நிர்வாகம் ,ஊழியர்கள் ஆகியோர் தரப்புகளில் தனித்தனியே  நடைபெற்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ்  பாதிப்பில் இரண்டாம் இடம் வகுத்து வருகிறது. தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக , ஊழியர்களின் ஒரு சில கோரிக்கைக்கு கோரிக்கைக்கு நிர்வாகம் தரப்பில், ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

FORD CHENNAI: போராட்டத்தை கைவிட்ட ஃபோர்டு ஊழியர்கள்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
 
இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், 34 நாட்களை கடந்து சென்றிருக்கும் எங்கள் போராட்டமானது  கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, ஜூலை மாதம் வரை உற்பத்தியை நிர்வாகம் நீடித்துள்ளது. மேலும் யாரேனும் தொழிற்ச்சாலையை வாங்குவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகிறது. இதுபோக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, எந்த வித நிபந்தனையும் இல்லாமல் தொழிலாலர்களை ஆலைக்குள் அனுமதிக்க நிர்வாகம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தீர்வு தொகை பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு உள்ளோம் எங்கள் பணிக்கு திரும்ப உள்ளோம் என தெரிவித்தனர்.
 
 
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
 
 
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Triumph Bike Prices Increase: இனி
Triumph Bike Prices Increase: இனி "டிரையம்ப்" வாங்குவது சுமைதானா? ஸ்பீட் 400, ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் விலை கிடுகிடு உயர்வு!
இனி சார்ஜ் செய்யக் காத்திருக்க வேண்டாம்! 'பேட்டரி ஸ்வாப்பிங்' தொழில்நுட்பம்.. 120 வினாடிகளில் முழு சார்ஜ் ஏற்றலாம்
இனி சார்ஜ் செய்யக் காத்திருக்க வேண்டாம்! 'பேட்டரி ஸ்வாப்பிங்' தொழில்நுட்பம்.. 120 வினாடிகளில் முழு சார்ஜ் ஏற்றலாம்
Honda Upcoming Cars: புதுசுலாம் செட் ஆகாது..! 3 லெஜண்டரி கார் மாடல்கள், ஹைப்ரிட் ஆக ரீலாஞ்ச்.. ஹோண்டா அதிரடி
புதுசுலாம் செட் ஆகாது..! 3 லெஜண்டரி கார் மாடல்கள், ஹைப்ரிட் ஆக ரீலாஞ்ச்.. ஹோண்டா அதிரடி
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget