![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காஞ்சிபுரம் : பங்குனி உத்திரம் ஏழாம் நாள்.. தேரை வடம் பிடித்து மகிழ்ந்த மக்கள்..
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
![காஞ்சிபுரம் : பங்குனி உத்திரம் ஏழாம் நாள்.. தேரை வடம் பிடித்து மகிழ்ந்த மக்கள்.. kanchipuram ekambaranathar temple festival panguni uitram 7 th day function in kanchipuram காஞ்சிபுரம் : பங்குனி உத்திரம் ஏழாம் நாள்.. தேரை வடம் பிடித்து மகிழ்ந்த மக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/98ff438b6f0fb9aa67a00191c8544ddd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் 7-ம் நாள் இன்று ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வென் கலர் பட்டு உடுத்தி, மல்லிகைப் பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சங்கரமடம், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஷ்வர் கோவில் வழியாக நான்கு ராஜ வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருளினார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று திருத்தேர் உற்சவத்தில் ஏகாம்பரநாதர் சுவாமியை தரிசித்து வழிபட்டு சென்றனர்.
தேரோட்டத்தின் போது சென்னை, குற்றாலம், தூத்துக்குடி, காஞ்சீபுரம் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான சிவனடியார்கள், தேரின் முன்பு சிவவாத்தியங்களை இசைத்தபடியும், வேத விற்பனர்கள் வேதபாராயணம் பாடியபடியும் தேரின் முன்பாக சென்றனர்.
எட்டாம் நாள் குதிரை வாகனம். ஒன்பதாம் நாள் மாவடி சேவை மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியின் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்குனி உத்திரம் என்றழைக்கப்படும் திருக்கல்யாண பெருவிழா நிறைவேறும். அதற்கு அடுத்த நாட்களில் ருத்ரகோட்டி உற்சவம், பஞ்ச மூர்த்தி உற்சவம் போன்றவை நிகழும். 13ஆம் நாள் நிகழ்வான தீர்த்தவாரி, கோவிலுக்கு அருகே உள்ள சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ, யானை உற்சவம் முடிந்த பின் கொடி இறக்கத்துடன் பங்குனி உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
ஏகாம்பரேஸ்வரர் கோவில் :
ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.
விழாக்கள்:
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)