மேலும் அறிய

திருவண்ணாமலை : மகா சிவராத்திரி லட்ச அர்ச்சனை பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்ச அர்ச்சனை தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அலை மோதிய கூட்டம் மேலும் காலை முதல் கோவிலில் இசைக்கச்சேரி நடைபெற்று வருகிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமாலும், பிரம்மனும் நானே பெரியவன் என்று தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதுடன், இதுகுறித்து அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது, தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என்று சிவன் கூறினார். ஆனால், இருவராலும் சிவனின் அடி, முடியைக் காண முடியவில்லை. இருவரும் தங்களுக்குள் இருந்த அகந்தை நீங்கி சிவனை வணங்கினர். இந்நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை என பக்தர்களிடையே நம்பிக்கை.

திருவண்ணாமலை : மகா சிவராத்திரி லட்ச அர்ச்சனை பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..
திருவண்ணாமலை : மகா சிவராத்திரி லட்ச அர்ச்சனை பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..

 

அதன்படி, செவ்வாய் கிழாமைஅண்ணாமலையார் கோவிலில் மஹாசிவராத்திரி விழா அண்ணாமலையார் மூலவர் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அண்ணாமலையார் மூலவர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. லட்சார்ச்சனை என்பது கடவுளின் திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்வது அஷ்டோத்திரம். ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாமம்.

சகஸ்ர நாமத்தை நுாறுமுறை சொன்னால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘லட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் உலகத்திற்கே நன்மை உண்டாகும். இவ்விழாவில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதியது இதனால் காலை முதல் கோவில் வளாகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.


திருவண்ணாமலை : மகா சிவராத்திரி லட்ச அர்ச்சனை பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..

 

இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தினர் சார்பில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 40 ஆண்டாக இன்று இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் நாதஸ்வர கலைமாமணி திருக்கைலாயமணி பட்டம் வென்ற டி.ஆர். பிச்சாண்டி தலைமையில் சிறுவர்கள் தங்களின் நாதஸ்வரம் மற்றும் தவில் என 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசைநிகழ்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் மாலை 5 மணிக்கு தேவார இசை, 6 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சிகள், போன்ற நிகழ்ச்சிகள் மாலை 4 மணி முதல் ஏராளமான பெண்கள் கோவிலின் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் 4,கலர் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிவபெருமானின் பல்வேறு வடிவங்களை தரைகளில் வரையவுள்ளனர்.மேலும் கோவிலின் வளாகத்தில் உப்புகோளங்களும் போடப்பட்ட உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவ மூர்த்திக்கு தாழம்பூ மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget