மேலும் அறிய

திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என புகார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும். இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில் திருமாளம் சக்கர கொத்தங்குடி மேணாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்த விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவில் திருமாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் தங்களது நெல் மூட்டைகளை கோவில்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலிலும் அடுக்கி வைத்து காத்திருக்கக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில்அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அறுவடை செய்து 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதால் மழை பெய்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

இந்த வருடம் குறுவை நெருப்பை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தமிழக அரசு அறிவிக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது குறித்து பலமுறை  அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waiver: விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசு.! பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்க- சீறும் இபிஎஸ்
விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசு.! பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்க- சீறும் இபிஎஸ்
முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விடிவு - விவசாயிகளுக்காக தவெக அரசிடம் அன்புமணி வைத்த கோரிக்கை என்ன?
முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விடிவு - விவசாயிகளுக்காக தவெக அரசிடம் அன்புமணி வைத்த கோரிக்கை என்ன?
‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ அமல்: விவசாயிகளுக்கு ₹611.26 இலட்சம் மானியம் - வேளாண் இணை இயக்குநர் தகவல்!
‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ அமல்: விவசாயிகளுக்கு ₹611.26 இலட்சம் மானியம் - வேளாண் இணை இயக்குநர் தகவல்!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இப்படியொரு விபரீதமா? பரங்கிப்பேட்டை கடலில் என்ன நடக்கிறது?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இப்படியொரு விபரீதமா? பரங்கிப்பேட்டை கடலில் என்ன நடக்கிறது?

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
Iran-US Peace Talk: “US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
“US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
TN Govt White Paper: “தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
“தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
WagonR Flex Fuel: புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
Upcoming SUVs 2026: SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
C. Vijayabaskar Quits ADMK: “கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
“கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
Embed widget