மேலும் அறிய

திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என புகார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும். இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில் திருமாளம் சக்கர கொத்தங்குடி மேணாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்த விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவில் திருமாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் தங்களது நெல் மூட்டைகளை கோவில்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலிலும் அடுக்கி வைத்து காத்திருக்கக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில்அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அறுவடை செய்து 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதால் மழை பெய்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

இந்த வருடம் குறுவை நெருப்பை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தமிழக அரசு அறிவிக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது குறித்து பலமுறை  அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Farmers Scheme: ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
இடர்பாடுகளை தாண்டி மும்முரம் அடைந்துள்ள சம்பா, தாளடி அறுவடை... ஆலக்குடி பகுதியில் விறுவிறுப்பு
இடர்பாடுகளை தாண்டி மும்முரம் அடைந்துள்ள சம்பா, தாளடி அறுவடை... ஆலக்குடி பகுதியில் விறுவிறுப்பு
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
Madurai ; சிறு தானிய திருவிழா: ஆட்சியரின் அழைப்பு.. ஆரோக்கிய வாழ்வுக்கு வழி - மானியங்கள், புதிய வாய்ப்புகள்!
Madurai ; சிறு தானிய திருவிழா: ஆட்சியரின் அழைப்பு.. ஆரோக்கிய வாழ்வுக்கு வழி - மானியங்கள், புதிய வாய்ப்புகள்!
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK joined DMK alliance: திமுக கூட்டணியில் தேமுதிக..! திடீரென அப்செட் ஆன அன்புமணி- இதுதான் காரணமா.?
திமுக கூட்டணியில் தேமுதிக..! திடீரென அப்செட் ஆன அன்புமணி- இதுதான் காரணமா.?
TN Roundup: காலி சேர்களுடன் பாஜக மாநாடு, வேலையை தொடங்கும் திமுக, ஈபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: காலி சேர்களுடன் பாஜக மாநாடு, வேலையை தொடங்கும் திமுக, ஈபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
IND vs SA: இனி தான் ஃபயரே..! பழிவாங்கும் மோடில் தெ.ஆப்.,? சமாளிக்குமா இந்தியா? சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை
IND vs SA: இனி தான் ஃபயரே..! பழிவாங்கும் மோடில் தெ.ஆப்.,? சமாளிக்குமா இந்தியா? சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை
Job News: மருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.1 லட்சம் ஊதியம் - தகுதி, வயது வரம்பு - சலுகை விவரங்கள்
Job News: மருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.1 லட்சம் ஊதியம் - தகுதி, வயது வரம்பு - சலுகை விவரங்கள்
Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்
Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்
சாலை தடுப்புச் சுவர் கட்ட ரூ. 11 லட்சம் லஞ்சம்.. தொக்காக மாட்டிய பாஜக எம்.எல்.ஏ. கைது!
சாலை தடுப்புச் சுவர் கட்ட ரூ. 11 லட்சம் லஞ்சம்.. தொக்காக மாட்டிய பாஜக எம்.எல்.ஏ. கைது!
Farmers Scheme: ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
Trump Tariff: எவன் சொன்னாலும் கேட்க முடியாது..! வரியை 15% ஆக உயர்த்திய ட்ரம்ப் - இந்தியா சொன்ன பதில் என்ன?
Trump Tariff: எவன் சொன்னாலும் கேட்க முடியாது..! வரியை 15% ஆக உயர்த்திய ட்ரம்ப் - இந்தியா சொன்ன பதில் என்ன?
Embed widget