மேலும் அறிய

திருவாரூரில் மழை நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

மாவூர்,  தென்னவராயநல்லூர், உய்யக்கொண்டான், மன்னார்குடி, நீடாமங்கலம் , திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக வருடம் தோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் 75 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து நான்கு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர்கள் சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் பாதிப்படைந்துள்ளன.


திருவாரூரில் மழை நீரில் மூழ்கிய  10 ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

குறிப்பாக தெளித்து 20 நாட்களே ஆன தாண்டி நெற்பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாவூர், தென்னவராயநல்லூர், உய்யக்கொண்டான், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் பெருமளவு ஈடுபட்டதால் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதில் முன்கூட்டியே சாம்பார் சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் பல நாற்று நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் இந்த மழை பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளனர். குறிப்பாக பின் பட்ட சம்பா சாகுபடியில் சன்ன ரகம் விதைத்ததில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் கனமழையால் மழை நீரில் மூழ்கி சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. 


திருவாரூரில் மழை நீரில் மூழ்கிய  10 ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்கள் மழை நீடித்தால் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தாலடி நெற்பயிர்கள் மன்னார்குடி நீடாமங்கலம் தொகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை என்பது மேலும் நீடிக்க கூடும் என்பதால் அப்பகுதிகளில் தாளடி நெற்பயிர் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் என விவசாயிகள்  கலக்கமடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு வருடமாக குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீடு என்பது இல்லாத நிலையில் தற்போது தாளடி மற்றும் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget