மேலும் அறிய

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல், பருத்தி, நிலக்கடலையை தொடர்ந்து தற்போது பச்சைபயிறையும் கொள்ளுமுதல் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிமுகபடுத்துவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசின் திட்டம் 

விவசாயிகளின் விளைபொருளுக்கு சரியான விலை வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பச்சைபயறு சாகுபடி செய்த விவசாயர்களை நன்மை அடையச் செய்யும் வகையில், மத்திய அரசின் நேபட் (NAFED) நிறுவனத்துடன் இணைந்து பச்சைபயறு கொள்முதல் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?

ஆட்சியர் அறிக்கை 

தற்போது உள்ளூர் சந்தையில் பச்சைபயறிற்கு 1 கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தரத்துக்கு ஏற்ப 1 கிலோ பச்சைபயறு ரூ.86.82 என்ற உயர்ந்த விலையில் அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;

 

378 மெட்ரிக் டன் பச்சைபயறு இலக்கு  

மயிலாடுதுறை மாவட்டத்தில், நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 378 மெட்ரிக் டன் பச்சைபயறு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?

தேவையான ஆவணங்கள் 

இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம் நகல் மற்றும் புகைப்படத்துடன், தங்களது வட்டார விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், பதிவு செய்த விவசாயிகளுக்கு விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விளைபொருள் கொண்டு வர வேண்டிய தேதியை தெரிவிப்பார்கள்.

 

கொள்முதல் அளவு மற்றும் காலக்கெடு

ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ அளவில் (அதாவது ஒரு ஏக்கருக்கு 155 கிலோ) பச்சைபயறு கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டம் 2024-2025 காலாண்டுக்கானதாகும், மேலும் பச்சைபயறு கொள்முதல் 29.06.2025 வரை தொடரும். விலைக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் அதிகமான விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள்

 

மயிலாடுதுறை: பா. சங்கர் ராஜ் – 80122 24723

 

குத்தாலம்: பி.மா. பாபு – 82208 69684

 

செம்பனார்கோவில்: ச. நடராஜன் – 99439 17494

 

சீர்காழி: எம்.ஏ. பாரதிராஜ் – 90804 27055

 

விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பச்சைபயறு விலை ஆதரவு திட்டத்தில் (Price Support Scheme – PSS) பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Embed widget