மேலும் அறிய

பெய்யாத பருவமழை: தள்ளிப்போன அணைகளின் நீர் திறப்பு.. தாமதமாக துவங்கிய பிசான நெல் சாகுபடி

பயிர்கள் 25 நாட்கள் வளர்ந்த நிலையில் உள்ளன. உரம் போடுதல், களை பறித்தல் பணிகளை தற்போது செய்து வருகிறோம். மழை சரியாக பெய்யாத போதிலும் குளத்தில் போதுமான தண்ணீர் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த போதிலும், அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் குளங்கள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளதால் பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பிசான நெல் சாகுபடியில் தாதம் ஏற்பட்டுள்ள போதிலும் 16 ஆயிரம் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் நம்பிக்கை.


பெய்யாத பருவமழை: தள்ளிப்போன அணைகளின் நீர் திறப்பு.. தாமதமாக துவங்கிய பிசான நெல் சாகுபடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் ஆண்டு தோறும் பிசான நெல் சாகுபடி நடைபெறுகிறது. வழக்கமாக நவம்பர் தொடக்கத்தில் பிசான நெல் சாகுபடி பணிகள் தொடங்கிவிடும். அதுபோல ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15-ம் தேதி வாக்கில் தொடங்கிவிடும். இதனால் அணைகளில் இருந்தும் அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தண்ணீரும் திறக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் பிசான நெல் சாகுபடிக்காக அணைகளில் இருந்து நவம்பர் 4-ம் தேதி முதல் தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. இதனால் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை.


பெய்யாத பருவமழை: தள்ளிப்போன அணைகளின் நீர் திறப்பு.. தாமதமாக துவங்கிய பிசான நெல் சாகுபடி

மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஏற்கனவே ஓரளவுக்கு தண்ணீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி பாசன குளங்களில் போதுமான அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பருவமழை சரியாக பெய்யாததாலும், அணைகளில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பிசான நெல் சாகுபடி பணிகளும் தாமதமாகவே தொடங்கின.


பெய்யாத பருவமழை: தள்ளிப்போன அணைகளின் நீர் திறப்பு.. தாமதமாக துவங்கிய பிசான நெல் சாகுபடி

ஒருசில பகுதிகளில் மட்டும் குளங்களில் ஏற்கனவே இருந்த தண்ணீரை நம்பி விவசாயிகள் நவம்பர் மாத தொடக்கத்தில் பிசான நெல் நடவு பணிகளை மேற்கொண்டனர். அந்த இடங்களில் மட்டும் தற்போது நெல் பயிர் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற அனைத்து பகுதிகளிலும் தற்போது தான் பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் பிசான நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிடும். இந்த ஆண்டு பிசான நெல் நடவு பணிகளே ஜனவரி 15 வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, கோரம்பள்ளம் குளத்தில் இந்த ஆண்டு ஏற்கனவே ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது. தற்போது அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக குளம் நிரம்பியுள்ளது. இதனால் முன்கூட்டியே பிசான நெல் நடவு பணிகளை செய்துள்ளோம். தற்போது பயிர்கள் 25 நாட்கள் வளர்ந்த நிலையில் உள்ளன. உரம் போடுதல், களை பறித்தல் பணிகளை தற்போது செய்து வருகிறோம். மழை சரியாக பெய்யாத போதிலும் குளத்தில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வராது என எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.


பெய்யாத பருவமழை: தள்ளிப்போன அணைகளின் நீர் திறப்பு.. தாமதமாக துவங்கிய பிசான நெல் சாகுபடி

இது குறித்து மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் கூறும்போது,மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டேர் ஆகும். கடந்த ஆண்டு 16,200 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 19,477 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு 16 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் 16 ஆயிரம் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டு பிசான நெல் சாகுபடியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை பிசான நெல் நடவு பணிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், பிசான நெல் சாகுபடிக்கு தேவையான டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன என்றார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 'வெள்ளை தங்கம்': 8 மாவட்டங்களுக்குப் பறக்கும் உர மூட்டைகள்!
சரக்கு ரயிலில் வந்திறங்கிய 'வெள்ளை தங்கம்': 8 மாவட்டங்களுக்குப் பறக்கும் உர மூட்டைகள்!
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Embed widget