மேலும் அறிய

விவசாயிகள் மீது பொய் வழக்கு: மயிலாடுதுறையில் பிப். 5 முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்..

விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை: திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் 9 விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள "பொய் வழக்குகளை" உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூர் சம்பவம்: பின்னணி என்ன?

சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் திருநாளின் போது, விவசாயிகளின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது, அந்தச் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் அவருடன் இருந்த 9 விவசாயிகள் மீது காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், விவசாயிகளின் குரலை ஒடுக்குவதற்காகப் போடப்பட்ட "பொய் வழக்குகள்" என்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான பிணை நிபந்தனைகள், அவர்களின் அன்றாட விவசாயப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இடையே, ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகளைச் சிறையில் அடைப்பதும், அவர்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்துவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. பொங்கல் போன்ற ஒரு புனிதமான நாளில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. அந்தப் பொய் வழக்குகளையும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும் தமிழக அரசு நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்."

பிப்ரவரி 5 முதல் தொடர் உண்ணாவிரதம்

விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால், மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டத்தை வலுப்படுத்தப் போவதாகச் சங்கம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி "தொடர் உண்ணாவிரதப் போராட்டம்" நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

 * மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

 * மயிலாடுதுறை தாலுகா அலுவலகம்

 * வரலாற்று சிறப்புமிக்க கிட்டப்பா அங்காடி

மேற்கண்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்

*ஈசன் முருகசாமி மீதான வழக்குகளை ரத்து செய்க: திருப்பூர் மாவட்டத்தில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

*ஜனநாயக உரிமையைப் பாதுகாக்குக: அமைதியான முறையில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மின்சார வாரியமும், காவல்துறையும் கைவிட வேண்டும்.

* உடனடி விடுதலை: சிறையில் உள்ள அல்லது நிபந்தனைப் பிணையில் உள்ள விவசாயிகளை எவ்வித நிபந்தனையுமின்றி முழு விடுதலை செய்ய வேண்டும்.

பரபரப்பான சூழலில் குறைதீர் கூட்டம்

ஏற்கனவே மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் பாதிப்பு, ஆழ்துளை கிணறு மின் இணைப்பு மற்றும் பயிர் சேதம் எனப் பல்வேறு புகார்களால் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த "பொய் வழக்கு" விவகாரம் கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளைத் திருடர்களைப் போலக் கருதி வழக்குத் தொடர்வதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. மயிலாடுதுறையில் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கவுள்ள போராட்டம், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் உணர்வைப் பிரதிபலிக்கும்" எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget