மேலும் அறிய

நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை - மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவங்கிவைத்தார். 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை - மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை

இந்தாண்டு  முட்பட்ட குறுவை பருவத்தில்  சுமார் 34,813 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தோராயமாக 1,39,250 மெ.டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இப்பருவத்திற்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய 119 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடங்களாக உள்ளது.  தற்சமயம் முதற்கட்டமாக குத்தாலம் தாலுகாவில் திருவாடுதுறை, கோணேரிராஜபுரம், திருவாலங்காடு, கருப்பூர், கோடிமங்கலம், சிவனாகரம், மேக்கிரிமங்கலம் ஆகிய 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அதில் மேக்கிரிமங்கலம், திருவாடுதுறை மற்றும் கருப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. 


நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை - மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை

நடப்பு பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு 2,160 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து நெல்லினை விற்பனை செய்திட வங்கி கணக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தீடீர்  மழை போன்ற காரணங்களால் பாதிக்கப்படாமல் உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை - மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவது தெரிய வந்தால் கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டால் அதை கண்டறிய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள்  அல்லாது வியாபாரிகள் நெல் கொண்டு வந்து நேரடி  கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் குறித்த புகார்களுக்கு நேரடி நெல் கொள்முதல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 04364-211054 -யை தொடர்பு கொண்டு  புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார். 

Mari Selvaraj : அடுத்த படத்துக்கு தயார்.. 90-களில் தூத்துக்குடிதான் கதைக்களம்.. மாரியின் அடுத்த பட அப்டேட்..

இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, இணை இயக்குனர் வேளாண்மை சேகர், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், குத்தாலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் முருகப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகர், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget