மேலும் அறிய

தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுப்பது எப்படி?

தென்னையில் ஏற்படும் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

தஞ்சாவூர்: பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு... தென்னையைப் பெற்றால் இளநீரு... என்பது பழமொழி. காவிரி டெல்டா பகுதிகளில் பெருமளவு நெல் சாகுபடியே அதிகமென்றாலும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடியும் அதிகளவில் நடந்து வருகிறது. தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் ஏற்பட்டால் அதை தடுப்பது எப்படி என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி நடக்கிறது. மேலும் காய்கறிகள், பூக்கள், எள், உளுந்து போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தென்னை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடியும் அதிகளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தென்னையில் ஏற்படும் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை சுமார் 45,000 எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தென்னை மிக முக்கிய வாழ்வாதார பயிராக உள்ளது. தென்னையில் பல்வேறு பூச்சிகள் சமீப ஆண்டுகளில் சவாலாக இருந்து வந்துள்ளது. இதில் தென்னை ஓலையில் பச்சயத்தை மட்டும் சாப்பிட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தும் கருந்தலைப்புழுவானது சமீப காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தியுள்ள ஆய்வில் மிதமான கருந்தலை புழு தாக்குதல் தென்னையில் தென்பட்டுள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னையில் கருந்தலைப்புழு வராமல் தடுக்க, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்

தென்னை மட்டைகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் கருத்தலை புழு தாக்கம் எங்கேனும் தென்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். காய்ந்த தென்னை மட்டைகள் மற்றும் 2 - 3 முதிர்ந்த தென்னை மட்டைகளை நீக்கிவிட வேண்டும். அவை கருந்தலைப் புழுவின் முட்டைகள் மற்றும் கூட்டுப் புழுவிற்கு புகலிடமாக அமையும்.

தென்னை ஓலைகள் மற்றும் மட்டைகள் வெளியூரில் இருந்து தோட்டங்களுக்கு கொண்டு வருவதை தடுக்க வேண்டும். இயற்கை எதிரிகளை அதிகரிக்கும் நோக்கில் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தவல்ல பிரக்கணாய்டு ஒட்டுண்ணிகளை ஒரு மரத்திற்கு 30 எண்ணிக்கை என்ற வீதத்தில் பண்ணைகளில் விட வேண்டும். தென்னைக்கு மிக சரியான அளவில் உரமிட்டு நீர் பாய்ச்சிவர வேண்டும். இதனால் தென்னை மரங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு கருந்தலைப்புழு தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

கருந்தலைப்புழுவானது எண்ணெய் பனை. பனை. ஈச்சமரம். பாக்கு மற்றும் அழகு பனைகளிலிருந்தும் பரவும் அதன் மூலமாகவும் நம் பண்ணைகளுக்கு பரவ வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மரங்களை நம் பண்ணைக்குள் கொண்டு வருவதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கருந்தலை புழு கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணியான பிரக்கனாய்டு ஒட்டுண்ணிகள் ஆயிரம் முட்டைகள் அடங்கிய அட்டை ரூபாய் 45க்கு கிடைக்கும். ஹெக்டருக்கு மூன்று அட்டைகளை வாங்கி தென்னை மரங்களில் கட்டுவதன் மூலம் கருந்தலை புழு பரவலை வெற்றிகரமாக தடுக்க முடியும். மகசூலை அதிகரிக்க முடியும். இவ்வாறு தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

புதிய அரசாணை சாத்தியமற்றது; உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!
புதிய அரசாணை சாத்தியமற்றது; உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!
கடந்த ஆட்சி ஊழலை வச்சு ரூ.12 லட்சம் கோடி கடனை அடைக்கலாம் - அரசுக்கு விவசாயி கொடுத்த மாஸ் ஐடியா
கடந்த ஆட்சி ஊழலை வச்சு ரூ.12 லட்சம் கோடி கடனை அடைக்கலாம் - அரசுக்கு விவசாயி கொடுத்த மாஸ் ஐடியா
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget