மேலும் அறிய

நெல் ஈரப்பதத்தை 22% என நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என நிரந்தரமாக அறிவிக்க மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியக்குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நடப்பாண்டு கடந்த மே 24ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்துள்ளது. தற்போது வரை 80 சதவீதம் வரை குறுவை அறுவடை நடந்துள்ளது. அறுவடை தொடங்கியது முதல் தஞ்சை மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் மையங்கள் கடந்த செப்., 1 முதல் திறக்கப்பட்டன. விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிது. இதில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள்  அறுவடை செய்யும் நெல் நனைந்து ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறுவை அறுவடையின் போது, மழையால் நெல்மணிகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.


நெல் ஈரப்பதத்தை 22%  என நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

இந்நிலையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் அனுப்பியது. தொடர்ந்து நேற்று மத்திய உணவு கழக  ஹைதராபாத் உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையில், மத்திய உணவு கழக சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி சி.யுனஸ், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில், வணிக பொது மேலாளர் மகாலட்சுமி அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.

பின்னர், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

ஆலக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது விவசாயி பாரதி உட்பட ஏராளமான விவசாயிகள் குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget