மேலும் அறிய

நெல் ஈரப்பதத்தை 22% என நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என நிரந்தரமாக அறிவிக்க மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியக்குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நடப்பாண்டு கடந்த மே 24ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்துள்ளது. தற்போது வரை 80 சதவீதம் வரை குறுவை அறுவடை நடந்துள்ளது. அறுவடை தொடங்கியது முதல் தஞ்சை மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் மையங்கள் கடந்த செப்., 1 முதல் திறக்கப்பட்டன. விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிது. இதில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள்  அறுவடை செய்யும் நெல் நனைந்து ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறுவை அறுவடையின் போது, மழையால் நெல்மணிகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.


நெல் ஈரப்பதத்தை 22%  என நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

இந்நிலையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் அனுப்பியது. தொடர்ந்து நேற்று மத்திய உணவு கழக  ஹைதராபாத் உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையில், மத்திய உணவு கழக சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி சி.யுனஸ், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில், வணிக பொது மேலாளர் மகாலட்சுமி அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.

பின்னர், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

ஆலக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது விவசாயி பாரதி உட்பட ஏராளமான விவசாயிகள் குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget