மேலும் அறிய

விவசாயிகள் கவனத்திற்கு... வரும் 15ம் தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்!

நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாள். எனவே கடைசி நாள் வரை இல்லாமல் விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாள். எனவே கடைசி நாள் வரை இல்லாமல் விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 35000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டு வருகின்றது. விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற்பயிரை காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய வரும் 15 கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் நெற்பயிரினை மேற்கண்ட ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் காப்பீடு செய்தால் போதுமானது.

பயிர் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.539 செலுத்த வேண்டும். விவசாயிகள் காப்பீடு செய்யும் பொழுது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும். கட்டணத் தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இயற்கை இடர்பாடுகளை யாராலும் கணிக்க இயலாது என்பதால் விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே காப்பீடு செய்து கடைசி நேரத்தில் பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த குறுவை பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் 15ம் தேதி குவிந்து விடுவார்கள் என்பதால் பயிர் காப்பீடு செய்யப்படும் இணையதளம் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு காப்பீடு செய்ய இயலாத நிலை உருவாகும் என்பதால் முன்கூட்டியே இதை செய்து கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget