மேலும் அறிய

Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியில் கூட்ட அரங்கில் இருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். அப்போது தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டுமென மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் எனவும், இந்த தீர்ப்பு வழங்கியும் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை தமிழக விவசாய சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும், குறிப்பாக 1996-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான குழுவில் தானும் பங்கேற்றேன் என்றும்,

 


Cauvery Issue: காவிரி விவகாரம்; திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதால் அன்றைய தினம் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் சாதாரணமான விஷயமாக இருக்கும் எனவும், ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசுதான் தான் தோன்றித்தனமாக செயல்படுவது தமிழக விவசாயத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிப்பது போல இருக்கின்றது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட ஐந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட மறுக்கக்கூடிய கர்நாடகா அரசின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்கிறோம் எனவும், இல்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்த போவதாக  தெரிவித்தார். இது மட்டுமின்றி இன்றைக்கு நடைபெற்ற விவசாயிகள் மாதந்திர கூட்டத்தில் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தண்ணீரை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி தண்ணீரை உடனடியாக பெற்று தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget