மேலும் அறிய

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?

ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், சிலாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை.. மகிழ்ச்சியில் இரண்டு மாவட்ட விவசாயிகள்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை
 
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டம்  ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. ஏரிகளை நம்பி ஏராளமான விவசாயிகள், பெயர் வைத்து வருகின்றனர்.  அதேபோன்று    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பல்வேறு, ஆறுகள்  ஓடுகின்றன.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதான ஆறுகளாக, செய்யாறு மற்றும் பாலாறு இருந்து வருகிறது.  இந்த இரண்டு  ஆற்று நீரும்,  வீணாக கடலில் கடப்பதாக விவசாயிகள் பல ஆண்டுகளாக வேதனை தெரிவித்து வந்தனர். எனவே பாலாறு மற்றும் செய்யாறு பகுதிகளில்  தடுப்பணை கட்டி நீரை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலிருந்து உருவாகி,  காஞ்சிபுரம் மாவட்டம்   திருமுக்கூடல் என்ற பகுதியில்  பாலாற்றில் கலக்கிறது.

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
 
செய்யாறு ( ஆறு )
 
இந்த நிலையில் செய்யாற்று அனுமந்தண்டலம் என்ற பகுதியில் ஏற்கனவே, தடுப்பணை  உள்ளது. இந்த நிலையில் கூடுதல் தடுப்பணை எங்க கட்ட வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.  இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மற்றொரு பிரதான ஆறாக பாலாறு உள்ளது. பாலாற்றிலும்    பழைய சீவரம்,  ஈசூர்,  வயலூர் ஆகிய மூன்று இடங்களிலும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டது.

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
 
பாலாற்றில் தடுப்பணை
 
கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள  சிலாம்பாக்கம் பகுதியில் உள்ள செய்யாற்றில் புதிய அணைக்கட்டு கட்ட அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து,  தற்பொழுது தமிழக அரசு சார்பில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தடுப்பணை கட்டப்பட உள்ளது.
 

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
 
இந்த சிலாம்பாக்கம் அணை கட்டுவதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் , உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம்,  ஒழுக்கரை,  மாகரல்  ஆகிய கிராமங்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் அரச பாலை ஆகிய கிராமங்களில் உள்ள, 1516  ஏக்கர் மற்றும் வயலாத்தூர் கால்வாய் மூலம் நேரடி பாசனமாக 100 ஏக்கர் ஆக மொத்தம் 1623 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற உள்ளது.  அதேபோன்று 132 கிணறுகளும்    தடுப்பணை மூலமாக பயன்பெற உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது துவங்கி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தடுப்பணைகள் தொடர்ந்து கட்டப்பட்டு வருவதால் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
 
இரண்டு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
 
குறிப்பாக தடுப்பணை கட்டுப்பட்டு வருவதால் நீண்ட காலத்திற்கு சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், செய்யாற்றை போல பாலாற்றிலும் கூடுதல் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே அரசு அறிவித்த இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 

2 மாவட்ட விவசாயிகள் ஹேப்பி..! செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..! அடுத்த திட்டம் என்ன ?
 
பாலாற்றில் விஷார், வெண்குடி, வெங்கடாபுரம் ஆகிய பகுதியின் விரைந்து தடுப்பணை கட்ட  கோரிக்கை வைத்துள்ளனர். பாலாற்று தடுப்பணைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டால்,  நிலத்தடி நீர் மட்டம் உயரும், பல ஏக்கர் விவசாய நிலங்கள்  பயனடைவது மட்டுமின்றி,  எதிர்பாராத விதமாக  வறட்சி ஏற்படும் பொழுது,  நிலத்தடி நீர்மட்டம் உதவும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget