மேலும் அறிய

தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற உர பரிந்துரை

தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் ஒல்லிக்காய்களை தவிர்க்கலாம்.

தஞ்சாவூர்: தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது. ஒல்லிக்காய்கள் என்பவை காய்களின் பருமன் குறைந்து, சிறுத்து நீளமாகவும், உள்ளே பருப்பற்றும் கொட்டாங்கச்சியுடனே அல்லது வெறும் உரிமட்டையுடனே காணப்படும். சில சமயங்களில் கொட்டாங்கச்சி வெடித்து பருப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் பூசணங்களால் தாக்கப்பட்டு கருப்பாக காணப்படும். இதனை வைப்பாலை தேரைக்காய் எனவும் அழைக்கின்றனர்.

தென்னையில் ஒல்லிக்காய் உற்பத்திக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் பாரம்பரிய குணம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மற்றும் மரகத சேர்க்கை குறைபாடு போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சரிவர பராமரிக்கப்படாத தோப்புகளிலும், மானாவாரி தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகின்றது. இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுவதன் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்களை குறைத்து அதிக விளைச்சல் பெறலாம். பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லாத மரங்களில் இருந்து 12 மாதம் முதிர்ச்சி அடைந்த தென்னை நெற்றுக்களை தேர்வு செய்து அதிலிருந்து நாற்றுக்களை தயார் செய்ய வேண்டும்.

நாற்றுகளின் வயது 9 முதல் 12 மாதம். அதிக வேர்களை உடைய கன்றுகள். கன்றுகளின் கழுத்து பகுதி அதிக பருமன் உடையவை. ஐந்து முதல் ஏழு இலைகள் உடையவை. விரைவில் ஓலை பிரிப்பவை. பூச்சி நோய் தாக்கப்படாதவை. ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்த்தல்

தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் ஒல்லிக்காய்களை தவிர்க்கலாம்.


தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற உர பரிந்துரை
நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் தழைச்சத்து, 260 கிராம் மணி சத்து, 820 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதனை ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களின் மூலம் ஈடுகட்ட வேண்டும். மேலும் சோடியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, தாமிரம் மற்றும் போரான் போன்ற ஊட்டச்சத்துக்களும் தென்னை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனை ஈடு செய்ய தென்னைக்கான நுண்ணூட்டக் கலவைகளை வளர்ந்த தென்னைக்கு ஒரு கிலோ என்ற அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இட வேண்டும். மேலும் இயற்கை எருவாகிய மக்கிய சாணம், கம்போஸ்ட், கோழி எரு, மக்கிய ஆலை மற்றும் தென்னை நாற்கழிவுகளை இடலாம். இவை தவிர பசுந்தாள் உர பயிர்களான சணப்பு, கொளுஞ்சி கலப்பகோனியம் போன்றவற்றை தென்னையின் ஊடே விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளம் காத்திடலாம். இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் தோன்றக்கூடிய ஒல்லிக்காய்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.

மக்கிய சாண எரு அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோ. யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்போர்ட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ இவைகளுடன் ஒரு கிலோ கூடுதல் பொட்டாஷ் மற்றும் 2 கிராம் வெண்காரத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுவதன் மூலம் ஒல்லிக்காய்கள் குறைந்து விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமான கொப்பரைகள் கிடைக்கின்றன.

சில விவசாயிகள் தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடர்த்திக்கும் அதிகமாக அடிக்கடி வேர் மூலம் உட்செலுத்துவதாலும் ஒல்லிக்காய்கள் தோன்ற வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தென்னையில் மகரந்த சேர்க்கை குறைந்து ஒல்லிக்காய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேர் மூலம் மருந்து உட்செலுத்தும் போது பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி மற்றும் பூசண மருந்துகளை சரியான அடர்த்தி மற்றும் இடைவெளியில் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறாக தரமான தென்னங்கன்று, சரிவிகித பயிர் உணவு, ஒருங்கிணைந்த உரம் மேம்பாடு மற்றும் பூச்சி, நோய் மேம்பாட்டின் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்கள் உற்பத்தியை குறைத்து அதிக விளைச்சல் பெற்று, மண்வளத்தையும் காத்திடலாம்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget