மேலும் அறிய

நிலக்கடலை சாகுபடி பணியில் மும்முரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை, திருக்கானூர்பட்டி, குருங்குளம், மேட்டுப்பட்டி, புனல்குளம், நாகப்புடையான்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி உட்பட பல பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக கரும்பு, உளுந்து, சோளம், நிலக்கடலை சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை, திருக்கானூர்பட்டி, குருங்குளம், மேட்டுப்பட்டி, புனல்குளம், நாகப்புடையான்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில் திருக்கானூர்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நிலக்கடலை விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். பயிருக்கு முறையான நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக செய்வது அவசியமாகும். நிலக்கடலை மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். பயிர் வகையை சார்ந்து இருந்தாலும் நிலக்கடலை மற்ற வகை பயிர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இது கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய் காய்க்கும் அதிசய பயிராக விவசாயிகள் மத்தியில் போற்றப்படுகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் நிலக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நோய் தாக்குதலில் பயிர் சிக்காமல் இருந்தால் நிலக்கடலை விளைச்சல் நன்றாக இருக்கும். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி வயலை உழுது நிலக்கடலை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து  வேளாண் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கார்த்திகை, மார்கழி மாதங்களில் நிலக்கடலைகளை விதைப்பது அதிக லாபம் தரும். அதற்கு நல்ல விதைகளை விதைப்பது அவசியமாகும். நிலக்கடலையில் ஏற்படும் வேர் மற்றும் தண்டு அழுகல் நோயை தடுக்க விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் நோய் பரவலை தடுக்கலாம். அதற்கான மருந்துகளாக கார்பன்டசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் அல்லது மான்கோசெப் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

பயிர்களை நோய் தாக்கினால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாதிரிகளை கொடுத்து அதற்கான தீர்வுகளை விவசாயிகள் பெறலாம். இவற்றை முறையாக கடைபிடிக்கும்போது விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் காணலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
Embed widget