மேலும் அறிய

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்

’’ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் மகசூல் கிடைக்கும் நிலையில் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும்’’

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன், பாரம்பரிய விவசாயத்தை குடும்பத்தை சேர்ந்தவர். பாலக்கோட்டில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக  தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் சோளம், கேழ்வரகு, நெல், கம்பு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். ஆனால் எந்த பயிர் செய்தாலும் போதிய வருவாய் இல்லாமல், மிகுந்த நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார்.  இதனால் புதுமையான பயிர்களை தேர்வு செய்து, பயிரிடும் என எண்ணியுள்ளார். அப்பொழுது ஓசூர் சென்றபோது, உறவினர் ஒருவர் பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர் சரவணன், பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்யும் முறை குறித்து கேட்டறிந்துள்ளார். ஆனால் இந்த பயிர் குளிர் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யமுடியும். தருமபுரி போன்ற வறட்சியான, தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வராது என தெரிவித்துள்ளனர்.

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்
 
ஆனால் ஆர்வத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு பன்னீர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில், சிவப்பு, பச்சை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பன்னீர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்த்து வந்துள்ளார். பன்னீர் ஆப்பிள் செடி வளர்ந்த இரண்டு வருடங்களிலேயே மகசூல் பிடித்தது. இது ஆண்டு  அறுவடைக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. இந்த பன்னீர் ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ளதால், ஜீரண கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குணப்படுத்தும், கர்ப்பிணிகள் உண்பதால், சுக பிரசவம் நடைபெறும். இதுபோன்ற  மருத்தவ குணம் கொண்டதால், மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தோட்டத்திற்கே வந்து  வியாபாரிகள் பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வதால் விற்பனை வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. 

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்
 
இதில் சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான பன்னீர் ஆப்பிள் விலை ஐம்பது ரூபாய், மற்ற ரகங்கள் ரூ.70 முதல் 100 விற்பனையாகிறது. ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கையோடு தெரிவி்க்கிறார்.  மேலும் இந்த பன்னீர் ஆப்பிள் சாகுபடிக்கு பராமரிப்பு மற்றும் கூலியாட்கள் தேவை முற்றிலுமாக இல்லை. இதனை கணவன், மனைவி இருவரே பராமரித்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் இவர்களே பன்னீர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய பன்னீர் ஆப்பிள் வறட்சியான தருமபுரி மாவட்டத்திலும் நன்கு வளர்ந்து லாபம் கொடுக்கிறது.  இதரால் கூலியாட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் நஷ்டம் சந்தித்து வரும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை தெரியப்படுத்தினால், விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
Farmers Subsidy : ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget