Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
விளையாட்டு விபரீதம் ஆனது என்பது போல் பிரேசிலில் பங்கி ஜம்பிங் எனப்படும் சாகச விளையாட்டின்போது பயிற்சியாளர்கள் கயிறு கட்ட மறந்ததால் இளம்பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ நகரின் உட்பகுதியில் உள்ள லிமெய்ரா என்ற இடத்தில் பங்கி ஜம்ப் என்ற சாகச விளையாட்டு செய்யும் இடம் அமைந்துள்ளது. பங்கி ஜம்ப் என்றால் உயரமான பாலங்கள், கட்டடங்கள் அல்லது கிரேன்களில் இருந்து கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகீழாக கீழே குதிக்கும் ஒரு சாகச விளையாட்டாகும். எந்தவிதமான பிடிப்புமின்றி காற்றில் விழுவது, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஊசலாடுவது போன்றவை சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை தரும். இருந்தாலும் இது ஆபத்தான விளையாட்டாகும்.
இதனிடையே லிமெய்ராவில் 21 வயதுப் பெண் ஒருவர் பங்கேற்று பங்கி ஜம்ப் செய்துள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த பெண்ணின் காலில் ரப்பராலான கயிற்றைக் கட்ட மறந்து தரையிலிருந்து 40 அடி உயரத்தில் இருந்து அவரை கீழே தூக்கி வீசினர். அவர் கீழே விழுந்து தரையில் மோதியபோது தான் காலில் கயிறு கட்டவில்லை என்பதே இவர்களுக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண் கீழே விழுவதைப் பார்த்த மேலே இருந்தவர்கள் பயத்தில் அலறும் சத்தமும் அதில் இடம்பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















