Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒருவரை ஒருவர் காலை வாரக் கூடாது, காங்கிரஸை ஏன் நீங்களே விமர்சனம் பண்ணிட்டு இருக்கீங்க என ராகுல்காந்தி கூட்டணி கட்சியினரிடமே நேரடியாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறிய நிலையில் திமுகவும், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளன. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸின் அணுகுமுறையால் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் பலவீனம் அடைந்திருப்பதாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளிடம் நேரடியாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கின்றனர். அப்போது பேசிய அவர், ” முதன்மை எதிரியான பாஜகவிடமிருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகல் ஒருவரையிருவர் காலை வாரக் கூடாது. நாடு மற்றும் அரசியலமைப்பிற்காக" அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும். வாக்கு திருட்டு" போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த விவகாரங்களில் சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்து ஆதரவு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸை அடிக்கடி விமர்சித்து டார்கெட் செய்யும் கட்சிகள் மீதும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கின்றனர். மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளை குறிப்பிட்டு அவர் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி காங்கிரஸை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அவரை கூட்டத்தில் வைத்து கொண்டே ராகுல்காந்தி இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜகவை தோற்கடிப்பது கடினமான விஷயம் கிடையாது, கூட்டணி கட்சியினர் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு தங்களை பலவீனப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார் ராகுல்காந்தி.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி இருந்தாலும், மாநில தேர்தல்களில் காங்கிரஸுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் இருக்கும் நிலையில் ராகுல்காந்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















