மேலும் அறிய

நூறு ரூபாய் வைக்க மாட்டியா? - பிடிபட்டான் துரைமுருகன் வீட்டு சுவரில் எழுதிய திருடன்| DhuraiMurugan |

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பண்ணை வீடு உள்ளது.அந்த பண்ணை வீட்டை திருவண்ணாமலை மாவட்டம் புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நள்ளிரவில் , பிரேம்குமார் உற்பட்ட அனைவரும் அவுட்ஹவுஸ்ல் தூங்கிக்கொண்ட இருந்தபொழுது , அடையாளம் தெரியாத திருடன் பண்ணை வீட்டுக்குள் புகுந்து, நுழைவு வாயிலின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளான் . வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். அன்று இரவே , துரைமுருகன் பண்ணை வீட்டிற்கு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவரின் பண்ணை வீட்டிலும் திருட முற்பட்ட கொள்ளையர்களுக்கு , பணம் , நகை ஏதும் கிடைக்காததால் ஆத்திரத்தில் ,துரைமுருகனின் பண்ணை வீட்டு நுழைவாயிலில் அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து துரைமுருகன் பண்ணை வீட்டு காம்பௌண்ட் சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’’ என எழுதி சென்றுள்ளனர் .

அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் வாணியம்பாடி நகர காவல்நிலைய பகுதிக்குட்பட்ட முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவர் வீட்டில் ஜூலை மாதம் 13ஆம் தேதியும் , வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் வசீம் அக்ரம் என்பவர் வீட்டில் ஜூன் மாதம் 23ஆம் தேதி தேதியும் , இரு வீட்டிலும் சேர்த்து 40 சவரன் தங்கநகைக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது .

இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து , புதிதாக பதவியேற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டு இருந்தார் . இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான இன்று , தனிப்படை போலீசார் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் (வயது 28 ) தந்தை பெயர் நஸீர் பாஷா என்ற இளைஞரை சோதனை செய்த பொழுது அவரிடம் 20 சவரன் தங்க நகை இருப்பது தெரியவந்தது .

சந்தேகத்து இடமான அந்த இளைஞரை உடனடியாக கைது செய்து திருப்பத்தூர் எஸ் பி சிபி சக்ரவர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தினர் . தீவிர விசாரணை செய்ததில் வாணியம்பாடியில் 2 வீடுகளில் தங்க நகையையும் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார். மேலும், வாணியம்பாடியில் முஸ்லிம்பூர் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியின் வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக திருடன் நவீத் தெரிவித்ததை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

கொள்ளையன் நவீத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 457 , 380 , 294 b , 384 , 397 , 506 (II ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் இவனது இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் , 13 வயதுடைய சிறுவன் உட்பட இருவருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களையும் கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

அரசியல் வீடியோக்கள்

KN Nehru Lalkudi MLA |
KN Nehru Lalkudi MLA | "தம்பி போப்பா..." கே.என்.நேரு - MLA மோதல்! நடந்தது என்ன?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget