Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
நெல்லை சுத்தமல்லியில் காதலித்த அக்காவை தம்பியே வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். 23 வயதான மூத்த மகள் ராமலட்சுமி கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள சூரிய மின்சக்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் கோயம்புத்தூரிலும் மூன்றாவது மகன் முத்துகிருஷ்ணன் (21) நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிலும் பணி செய்து வருகின்றனர்.
ராமலட்சுமி எப்போதும் செல்போனை பயன்படுத்தி கொண்டே இருப்பதாகவும் தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறி முத்துகிருஷ்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவரது சகோதரியை சத்தம் போட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் திருவிழா ஒன்றிற்காக விடுமுறையில் முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த சூழலில் ராமலக்ஷ்மி மொபைல் போனை தனியாக இருந்து பயன்படுத்தி வந்ததை அவர் கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தால் அக்காவை தம்பி கண்டித்ததாகவும் சொல்கின்றனர்.
வீட்டில் அப்பா அம்மா இல்லாத நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. வீட்டிலிருந்த அரிவாளை வைத்து அக்காவை தம்பி வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் ராமலட்சுமியை உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராமலட்சுமி தாய் கண்ணகி அளித்த புகாரின் அடிப்படையில் சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ட்ரெண்டிங் செய்திகள்





















