Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்
பார்த்து வந்த போலி பெண் மருத்துவர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் களத்துக்கே சென்று அப்பெண்களை கையும் களவுமாக பிடித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசநட்டி பகுதியில் மருத்துவம் படிக்காமல் க்ளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜுவ்காந்தி மற்றும் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி ஆகியோர் தலைமையில் ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசநட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் திடீரென ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் அதிரடி ரெய்டு விட்டனர். அப்போது 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்த சிலம்பரசி என்பவரும் டிப்ளமோ பார்மஸி படித்துள்ள கௌரி என்பவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது அம்பலமானது.
இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அவர்களை கைது செய்து அதிரடி காட்டினர். மேலும், கிளினிக் மற்றும் மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.
10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















