வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
அதிமுகவில் இ.பி.எஸ்ஸுக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 26 பேரை அதிரடியாக கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.
கடந்த சில நாள்களாகவே அதிமுக இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என இரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது.
இன்று சட்டமன்றத்தில் தவெக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன், லீமாஸ் ரோஸ் என 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதராவாக வாக்களித்தனர்.
அதேவேளையில், இபிஎஸ், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் 22 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதுமட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இபிஎஸ் திமுக-வின் ஆதரவோடு ஆட்சியமைத்து முதலமைச்சர் ஆக திட்டமிட்டார் என்றும், அது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.
மறுபக்கம், திமுகவிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், பதவி ஆசைக்காக இப்படிப் பேசுவதாகவும் இ.பி.எஸ் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உட்பட 26 பேரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.
அவர்களுக்குப் பதில் 17 பேர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















