அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் முதலமைச்சர் விஜய்க்கு குடைச்சல் கொடுத்த அருண் ஐபிஎஸ்-யே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்துள்ளது தவெகவினரை ஷாக் ஆக்கியுள்ளது. அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு கொடுத்துள்ளதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்கின்றனர்.
திமுக ஆட்சியில் அதிகாரமிக்கவராக திகழ்ந்தவர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண். அதே ஆட்சியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றிய அருண் மீது த.வெ.கவினருக்கு எதிராக அப்போது அவர் செயல்பட்டதாக கடுமையான புகார்களை முன்வைக்கத் தொடங்கிருக்கிறார்கள் அக்கட்சியினர். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்தது அப்போதைய காவல் ஆணையராக இருந்த அருண்-தான் என்றும் திமுக மேலிடத்தின் உத்தரவுபடியே அவர் அப்படி செயல்பட்டதாகவும், அவர் திமுக ஆதரவாளர் என்ற முத்திரையையும் அருண் மீது குத்தியது தவெக.
அதே நேரத்தில், திமுகவிற்கு எதிராக பேசிவந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது அணியினர் மீது பல வழக்குகளை போட்டு, அவர்களை சிறைக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு அருணுடையது என்றும் அவருக்கு த.வெ.க. ஆட்சியில் முக்கிய பதவி தரக்கூடாது என்றும் குரல் எழுந்தது. இருந்தாலும் சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்தும் விஜய் முக்கிய காரணங்களுக்காக அருணுக்கு பொறுப்பு கொடுத்துள்ளார்.
அருண் மீது கடும் விமர்சனங்களை த.வெ.க.வினர் முன் வைத்தாலும் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை சிறப்பாக பணி செய்ய வைக்கும் திறமை அருணுக்கு உண்டு என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். தவெக ஆட்சியிலும் அருண் போன்ற திறமையான போலீஸ் அதிகாரிகளை சரியாக முதல்வர் விஜய் பயன்படுத்தினால் அது தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் என்றும் அதிகாரிகள் வட்டத்தில் இருந்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை திமுக மற்றும் அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே எதிர்க்கட்சிகளாக இருக்கும் நிலையில், சிறிய குற்றச்செயல்களை கூட மிகப்பெரிய பிரச்னையாக அவர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்றும் அதற்கு அருண் போன்ற போலீஸ் அதிகாரிகளை முக்கிய பதவிகளில் பாரப்பட்சம் பார்க்காமல் நியமித்தால், த.வெ.க. ஆட்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அருண் ஐபிஎஸ்-க்கு பொறுப்பு தர வேண்டும் என நெருக்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு கொடுத்துள்ளதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















