மேலும் அறிய

Travel With ABP: காஞ்சிபுரத்தில் வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய 5 கோயில்கள் - அது என்னென்ன வாங்க பார்ப்போம்

Kanchipuram Must Visit Temples: சென்னை அருகில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றான, காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 5 முக்கிய கோயில்கள்.

காஞ்சிபுரம் என்றாலே கோயில் நகரம் ( Kanchipuram Temple City ) தான். தொடர்ந்து நாம் Travel With Abp தொடரின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து, பார்த்து வருகிறோம். காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற 5 கோயில்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்க உள்ளோம்

Top 5 Temples in kanchipuram: காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 முக்கிய கோயில்கள்

காஞ்சிபுரம் மாநகரில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. பல்வேறு புராதானமான கோயில்களும் உள்ளன. இவற்றில் வாழ்நாளில் கட்டாயமாக பார்க்க வேண்டிய 5 கோயில்கள்.

1.  கைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்
2.  வைகுண்ட பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
3.   காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
4.  ஏகாம்பரநாதர் கோயில் - காஞ்சிபுரம்
5   வரதராஜ பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் - KAILASANATHAR TEMPLE

பல்லவர்கள் கட்டிடக்கலையை ரசிக்க வேண்டும் என்றால், நிச்சயம் வர வேண்டிய இடம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தான். காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் இந்த அற்புதமான கலை கோயில் உள்ளது. இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்தக்கோயில் கி.பி. 700 இல் இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் தமிழ்நாட்டின் ஆரம்பகால சுவரோவியக் கலைப் படைப்புகள் உள்ளன. இக்கோயில் தென்திசை   கைலாயம் என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தியை இங்கு தரிசிக்கலாம். இங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே வேறு எங்கும் இது போன்ற சிற்பங்களை எளிதில் காண முடியாது.  இக்கோயிலில் பெண் தெய்வ வழிபாடு குறிக்கும் வகையில்,  மூத்த தேவி சிலையும் உள்ளது.

வைகுண்ட பெருமாள்  கோயில், காஞ்சிபுரம்- VAIKUNTA PERUMAL TEMPLE

108  வைணவ திருத்தலங்களில்  ஒன்றாக வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பரமேச்சுர விண்ணகரம்  என அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் பாடப்பட்ட இத்தலம் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. கோயில் மூன்று அடுக்குகளாக பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரம் போன்றே இக்கோயிலில் கவினுறு சிற்பங்கள், கோயில் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் சிற்பங்களின் கொள்ளை அழகை ரசிக்க நிச்சயம் இங்கு சென்று வரலாம்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் - KAMAKSHI AMMAN TEMPLE

மதுரைக்கு மீனாட்சி கோயில் என்றால், காஞ்சிபுரத்துக்கு காமாட்சி கோயில். காமாட்சி அம்பாள் இங்கே 4 கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருக்கைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.

51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்  திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன்  கோயில்களுக்கும் மையமாக இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. அதேபோன்று இக்கோயிலில் ஆழ்வார்களால் மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணு  சிலையும் உள்ளது.  விஷ்ணு  நின்ற கோலம்,  அமர்ந்த கோலம் மற்றும்  பள்ளியறை கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் - EKAMBARESWARAR TEMPLE

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருக்கச்சியேகம்பம் என அழைக்கப்படுகிறது. தேவாரம் பாடப்பட்ட கோயிலில் ஒன்றாக உள்ளது. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரிய  தலமாக உள்ளது. தலை விருட்சக மரமாக மா மரம் உள்ளது. இந்த மரம்  3000 ஆண்டுகள் பழமையானது,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த  மரம் பட்டுப் போகவே தற்பொழுது அந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்ட, மரபணுவில் உருவாக்கப்பட்ட மாமரம் உள்ளது. இந்த மாமரத்தில் 5 வகையான சுவைகளில் மாம்பழம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  

கோயில் சுமார்  1300 ஆண்டுகள் பழமையான கோயிலாக உள்ளது.  இக்கோயிலை பொறுத்த வரை பல  மன்னர்கள் ஆட்சி காலத்தில் தொடர்ந்து  அமைப்பு பணிகள் நடைபெற்று உள்ளது. கோயிலில் ஏராளமான கல்வெட்டு தொகுப்புகள் கிடைக்கின்றன. முன்னாள் இருக்கும் பெரிய ராஜகோபுரம் காண்பவர் கண்களை கவரும் வகையில் உள்ளது.

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-VARADARAJA PERUMAL TEMPLE

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படும் திருக்கச்சி கோயில் அத்தி வரதர் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. ஸ்ரீரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயிலுக்கு  அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒரு கோயிலாக இது உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோழர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். தொடர்ந்து முதலாம் குலோத்துங்க சோழன், விக்ரமசோழன் ஆகியோர் திருப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகர பேரரசு காலத்திலும் தொடர்ந்து பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளன. இக்கோயிலில் வருடத்திற்கு 200 நாட்கள் வரை உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Elon Musk Atrocity: வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க ஒப்புதல் – மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க ஒப்புதல் – மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
Fact Check: 30 லட்சம் தமிழக மாணவர்கள் மும்மொழி கற்கிறார்களா? அண்ணாமலை கூற்றை ஆணித்தரமாக மறுத்த அரசு!
Fact Check: 30 லட்சம் தமிழக மாணவர்கள் மும்மொழி கற்கிறார்களா? அண்ணாமலை கூற்றை ஆணித்தரமாக மறுத்த அரசு!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.