கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயண நேர மாற்றம்! ஓசூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் ஓசூர் நிலையத்தில் ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை தென்மேற்கு ரயில்வே மாற்றியுள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இந்த அதிவேக ரயில் தென்மேற்கு ரயில்வே (SWR) மண்டலத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி 1, 2024 அன்று தனது வழக்கமான சேவையைத் தொடங்கியது. ரயில் எண் 20642/20641 கோவை - பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.
கோவை மற்றும் பெங்களூரு இடையிலான பயணத்தின் போது, இந்த வந்தே பாரத் ரயில் ஐந்து நிலையங்களில் நிற்கிறது. ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர். இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்குகிறது. ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து காலை 07:25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 13:45 மணிக்கு பெங்களூரு கேண்ட்டை சென்றடைகிறது. அதன் மறுமார்க்கத்தில், ரயில் எண் 20641 பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கர்நாடக தலைநகரில் இருந்து மதியம் 14:20 மணிக்குப் புறப்பட்டு இரவு 20:40 மணிக்கு கோவையை வந்தடைகிறது.
தற்போது, மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் ஓசூர் நிலையத்தில் ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை தென்மேற்கு ரயில்வே மாற்றியுள்ளது. இந்த ரயில் தற்போதைய நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக ஓசூர் வந்தடையும். அதாவது, தற்போது மதியம் 12:03 மணிக்கு வருவதற்கு பதிலாக, மார்ச் 15 முதல் மதியம் 12:13 மணிக்கு ஓசூர் சென்றடையும். ஓசூர் நிலையத்தில் நேர மாற்றம் மார்ச் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மற்ற நிலையங்களின் நேரங்களில் மாற்றமில்லை.
- ரயில் எண் 20642: கோவை - பெங்களூரு கேண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
- ஓசூர் நிலையம்: தற்போதைய நேரம் - 12.03 / 12.05 (வருகை / புறப்பாடு).
- ஓசூர் நிலையம்: மாற்றப்பட்ட நேரம் - 12.13 / 12.15 (வருகை / புறப்பாடு).
இதர நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் கோவை மற்றும் பெங்களூரு இடையே ஏசி சேர் கார் வகுப்பில் பயணிக்க ரூ. 1,260 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிகியூட்டிவ் சேர் கார் (இ.சி) வகுப்பிற்கு இந்தக் கட்டணம் ரூ. 2,190 ஆகும்.























