மேலும் அறிய

வாடிக்கையாளருக்கு 20 ரூபாயை திரும்பத்தராத Airtel.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..

தவறுதலாக செய்யப்பட்ட 20 ரூபாய் ரீசார்ஜுக்கான பணத்தை திரும்ப தரவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ரூ.1020 திரும்ப கொடுக்கவேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறுதலாக செய்யப்பட்ட 20 ரூபாய் ரீச்சார்ஜுக்கான பணத்தை திரும்ப தரவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், மனு தாரருக்கு ரூ.1020-ஆக  திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தொடக்கனெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஹுசைன் ஷரீப். இவர் ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டை பயன்படுத்தி வருகிறார். இவர் எப்போதும் 49 ரூபாய்க்கான ரீச்சார்ஜ்ஜை தொடர்ந்து செய்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அவரது பேக்கிற்கான வேலிடிட்டி  முடிவடைந்த நிலையில், தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ரூபாயைக் கொண்டு 49 ரூபாய்க்கான பேக்கை ஆன்லைனில் ரீச்சார்ஜ் செய்துள்ளார். அந்த ரீச்சார்ஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, அவரது அக்கவுண்ட்டில் 14.95 ரூபாய் பேலன்ஸ் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மெசேஜும் ஷரீஃபின் எண்ணுக்கு வந்துள்ளது. ஆனாலும், அவருக்கு இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வசதிகள் தடைசெய்யப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கிறது. சிறிது நேரத்திலேயே வந்த மற்றொரு மேசேஜில் 20 ரூபாய்க்கு செய்யப்பட்ட ரிச்சார்ஜ் செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான ஷரீஃப், ஏர்டெல் சேவை மையத்தை அழைத்து இதுபற்றி புகாரளித்துள்ளார். ஆனால், 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்தான் அவரது சிம்கார்டுக்கான சேவை மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஏர்டெல் நிறுவன பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால், சாந்திநகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணையின்போது தனது தரப்பில்தானே ஆஜராகி வாதாடினார் ஷரீப். அப்போது, 20 ரூபாய்க்கு ஒரு ப்ளானே இல்லை எனும்போது ரீச்சார்ஜை எப்படி ஏர்டெல் ஏற்றுக்கொண்டது என்று கேள்வியெழுப்பியிருந்தார்.


வாடிக்கையாளருக்கு 20 ரூபாயை திரும்பத்தராத Airtel.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..

ஏர்டெல் நிறுவனத்திற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்த வழக்கு நடைபெற்ற 5 மாதம் முழுவதும் எந்த விசாரணையிலும் ஏர்டெல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கும், ஷரீபிற்கும் நடைபெற்ற உரையாடலை ஆராய்ந்த நீதிமன்ற நீதிபதிகள், 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். 

20 ரூபாய்க்கு ரீசார்ஜ் ப்ளான் இல்லையெனும்போது, அந்த தொகையை மனுதாரருக்கு ஏர்டெல் நிறுவனம் திரும்ப அளித்திருக்க வேண்டும்.

ஆனால், ஏர்டெல் அதை செய்யத் தவறிவிட்டது. வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்பக்கொடுக்காமல், 20 ரூபாயைத்தானே வைத்துக்கொண்டது முறையல்லாத வணிக செயல்பாடாகும் என்று கூறிய நீதிமன்றம், மனுதாரருக்கு 20 ரூபாயை திரும்பித்தருமாறும், சேவை குறைபாட்டிற்காக 500 ரூபாய் மற்றும் வழக்கு நடத்தியதற்கான தொகையாக 500 ரூபாய் என்று மொத்தம் 1020 ரூபாயை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
Embed widget