மேலும் அறிய

Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான்.

இந்தியாவில் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்றார். இந்தியாவுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி அசத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். டென்னிஸ் விளையாட்டில் தனக்கென மட்டுமில்லாமல், உலக அளவில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.

இந்தநிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், மிர்சாவுக்கு பிரிவு உபச்சாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியானது நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தெலுங்கான அமைச்சர்களாக கே.டி. ராமா ராவ், வீ. சீனிவாச கவுடு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், யுவராஜ், மலையாள நடிகர் துல்கர் சல்மான், சானியா மிர்சாவின் சிறந்த நண்பரான பெத்தானி மேட்டக் மற்றும் மிர்சாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

சானியா மைதானத்தை அடைந்ததும், அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு கைதட்டி, பிரமாண்டமாக வரவேற்றனர். தனது பிரியாவிடை உரையில் சானியா மிர்சா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ எனது கேரியரின் கடைசிப் போட்டியில் உங்கள் அனைவரின் முன்னிலையிலும் விளையாடுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார். 20 ஆண்டுகளாக எனது நாட்டிற்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். தனது நாட்டுக்காக உயர்மட்டத்தில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும், என்னால் அவ்வாறு செய்ய முடிந்தது.” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “இவை மகிழ்ச்சியின் கண்ணீர் என்று கூறினார். இதைவிட சிறந்த பிரியாவிடையை நான் கேட்டிருக்க முடியாது. நான் டென்னிஸுக்கு விடைபெற்றாலும், இந்தியா மற்றும் தெலுங்கானாவில் உள்ள டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பேன், மேலும் அதை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து பாடுபடுவேன் என்றார். இந்த பேச்சுக்குப் பிறகு, சானியா மிர்சா கடைசி போட்டியில் விளையாடினார், அப்போதைய தெலுங்கானா விளையாட்டு அமைச்சர் வி ஸ்ரீனிவாஸ் கவுடும் சானியாவுக்கு மரியாதைக்குரிய உரையுடன் அற்புதமான பிரியாவிடை அளித்தார். 

தொடர்ந்து தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரண்டு கலப்பு போட்டியிலும் சானியாவே வெற்றிபெற்றார். 

சானியா ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் தனது தொழில் வாழ்க்கையின் கடைசி போட்டியில் விளையாடினார். இதே மைதானத்தில்தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம் பிரமாண்டமாக அறிமுகமானார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget