மேலும் அறிய

வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!

Thulasimathi: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் ஒற்றைய பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களை வென்றது. 

 


வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!

பாரா ஒலிம்பிக் போட்டியில், பேட்டமிட்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கணையை எதிர்த்து காஞ்சிபுரம் பெண் மோதுகிறார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியான நிலையில் அவர் தங்கம் வெல்வரா என்று காஞ்சிபுரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

யார் இந்த துளசிமதி முருகேசன்?

காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(22). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்தே இவரது தந்தை இவருக்கு பயிற்சி அளித்தார். அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்டமிட்டன் பிரிவில் வெற்றி பெற்றார்.


வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!

இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். துளசிமதி முருகேசன் கடந்த 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார். சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடும் , துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. இவரது தந்தை முருகேசன், பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். சிறுவயதில் இருந்து தனது மகள் துளசிமதிக்கு, பேட்மிட்டன் பயிற்சி அளித்து வந்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளை மீறியும், தனது பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்ததாக அவரது தந்தை முருகேசன் நம்மிடம் தெரிவித்தார்.

இறுதிப்போட்டி

இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இவருக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இவர் பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இவர் சீனாவின் யங் என்ற வீராங்கணையுடன் மோதுகிறார். 


வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!

 மக்கள் எதிர்பார்ப்பு

இந்த யங் இதுவரை வேறு யாரிடமும் தோல்வியை சந்திக்காதவர். ஆசிய அளவிலான போட்டியில் ஒரு முறை மட்டும் இறுதி போட்டியில் மோதும் காஞ்சிபுரம் துளசிமதியிடம் தோல்வி அடைந்துள்ளார். அந்த நம்பிக்கையில் யங்கை எதிர்கொள்கிறார் துளசிமதி. துளசிமதிக்கு வெள்ளிப்பத்ககம் உறுதியான நிலையில் அவர் தங்கம் வெள்வாரா? என்று காஞ்சிபுரம் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.


வீடு முழுவதும் பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் துளசிமதி.. எதிர்பார்ப்பில் காஞ்சி மக்கள்...!

இதுகுறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில்,“துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன். அவருக்கு வெள்ளிப்பத்ககம் உறுதியான நிலையில் இறுதிப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. காஞ்சிபுரம் மக்களைப் போல் நானும் அவரது இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Breaking News LIVE: சமத்துவம், சமூகநீதி, சம உரிமை.. பெரியாரைப் போற்றிய விஜய்
Breaking News LIVE: சமத்துவம், சமூகநீதி, சம உரிமை.. பெரியாரைப் போற்றிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Breaking News LIVE: சமத்துவம், சமூகநீதி, சம உரிமை.. பெரியாரைப் போற்றிய விஜய்
Breaking News LIVE: சமத்துவம், சமூகநீதி, சம உரிமை.. பெரியாரைப் போற்றிய விஜய்
Samsung Protest : போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
ATM Card Tips: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கைது - உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி? விவரங்கள் இதோ..!
ATM Card Tips: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கைது - உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி? விவரங்கள் இதோ..!
India On Iran: உரசிய ஈரான், திருப்பி கொடுத்த இந்தியா - ”வரலாற புரட்டிப் பாருங்க” என்ற பதிலடிக்கான காரணம் என்ன?
India On Iran: உரசிய ஈரான், திருப்பி கொடுத்த இந்தியா - ”வரலாற புரட்டிப் பாருங்க” என்ற பதிலடிக்கான காரணம் என்ன?
Embed widget