மேலும் அறிய

Tokyo paralympics 2020: பேட்மிண்டன் பிரமோத், கிருஷ்ணா அரையிறுதிக்கு தகுதி !

Tokyo paralympics 2020: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒரே நாளில் இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் இம்முறை முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று முதல் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கின. தற்போது அனைத்து பிரிவுகளிலும் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியா சார்பில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரமோத் பகத் பங்கேற்றுள்ளார். இவர் நேற்று தன்னுடைய முதல் குரூ போட்டியில் சக இந்திய வீரர் மனோஜ் சர்காரை தோற்கடித்தார். 

அதன்பின்னர் இன்று நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சாண்டரை எதிர்த்து விளையாடினார். அதில் 13 நிமிடங்களில் முதல் கேமை 21-12 என்று வென்றார். இரண்டாவது கேமை 14 நிமிடங்களில் 21-9 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் பிரிவில் தன்னுடைய இரண்டு  போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். இந்த பிரிவில் 5 முறை உலக சாம்பியன் என்பதால் இப்பிரிவில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. 

 

அதேபோல ஆடவர் எஸ்ஹெச்6 பிரிவில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றுள்ளார். இவர் முதல் குரூப் போட்டியில் மலேசிய வீரர் டிடினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை 22-20 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமை 21-10 என எளிதாக வென்றார். இந்தப் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மலேசிய வீரர் டிடின் இன்று தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடினார். அதில் காயம் காரணமாக பாதியில் விலகினார். ஆகவே மொத்தம் 3 பேர் கொண்ட குரூப்பில் மலேசிய வீரர் விலகியுள்ளதால் கிருஷ்ணா நாகர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

 

மகளிர் எஸ்யூ-5 பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் இன்று பங்கேற்றார். அதில் அவர் துருக்கி வீராங்கனை எமினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 21-12,21-18 என்ற கணக்கில் பாலக் கோலி வென்றார். ஏற்கெனவே நேற்று தன்னுடைய முதல் குரூப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் பாலக் கோலி தோல்வி அடைந்தார். எனவே நாளை ஜப்பான் வீராங்கனை எமினை தோற்கடிக்கும் பட்சத்தில் பாலக் கோலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவார். 

 

இவை தவிர ஆடவர் எஸ்.எல்-4 பிரிவு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் மற்றும் தருண் தில்லான் ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். இன்று இவர்கள் இருவரும் தங்களுடைய முதல் குரூப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.ஐஏஎஸ் அதிகாரியான  சுஹேஷ் யேத்தி ராஜ் ஜெர்மனி வீரர் நிகல்ஸை 21-9,21-3 என எளிதாக வென்றார். அதேபோல் தருண் தாய்லாந்து வீரர் சிரிபோங்கை 21-7,21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். நாளை இவர்கள் இருவரும் தங்களுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:பாராலிம்பிக் படகுப்போட்டி : அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்திய வீராங்கனை..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget