மேலும் அறிய

Tokyo paralympics 2020: பேட்மிண்டன் பிரமோத், கிருஷ்ணா அரையிறுதிக்கு தகுதி !

Tokyo paralympics 2020: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒரே நாளில் இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் இம்முறை முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று முதல் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கின. தற்போது அனைத்து பிரிவுகளிலும் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியா சார்பில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரமோத் பகத் பங்கேற்றுள்ளார். இவர் நேற்று தன்னுடைய முதல் குரூ போட்டியில் சக இந்திய வீரர் மனோஜ் சர்காரை தோற்கடித்தார். 

அதன்பின்னர் இன்று நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சாண்டரை எதிர்த்து விளையாடினார். அதில் 13 நிமிடங்களில் முதல் கேமை 21-12 என்று வென்றார். இரண்டாவது கேமை 14 நிமிடங்களில் 21-9 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் பிரிவில் தன்னுடைய இரண்டு  போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். இந்த பிரிவில் 5 முறை உலக சாம்பியன் என்பதால் இப்பிரிவில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. 

 

அதேபோல ஆடவர் எஸ்ஹெச்6 பிரிவில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றுள்ளார். இவர் முதல் குரூப் போட்டியில் மலேசிய வீரர் டிடினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை 22-20 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமை 21-10 என எளிதாக வென்றார். இந்தப் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மலேசிய வீரர் டிடின் இன்று தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடினார். அதில் காயம் காரணமாக பாதியில் விலகினார். ஆகவே மொத்தம் 3 பேர் கொண்ட குரூப்பில் மலேசிய வீரர் விலகியுள்ளதால் கிருஷ்ணா நாகர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

 

மகளிர் எஸ்யூ-5 பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் இன்று பங்கேற்றார். அதில் அவர் துருக்கி வீராங்கனை எமினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 21-12,21-18 என்ற கணக்கில் பாலக் கோலி வென்றார். ஏற்கெனவே நேற்று தன்னுடைய முதல் குரூப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் பாலக் கோலி தோல்வி அடைந்தார். எனவே நாளை ஜப்பான் வீராங்கனை எமினை தோற்கடிக்கும் பட்சத்தில் பாலக் கோலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவார். 

 

இவை தவிர ஆடவர் எஸ்.எல்-4 பிரிவு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் மற்றும் தருண் தில்லான் ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். இன்று இவர்கள் இருவரும் தங்களுடைய முதல் குரூப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.ஐஏஎஸ் அதிகாரியான  சுஹேஷ் யேத்தி ராஜ் ஜெர்மனி வீரர் நிகல்ஸை 21-9,21-3 என எளிதாக வென்றார். அதேபோல் தருண் தாய்லாந்து வீரர் சிரிபோங்கை 21-7,21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். நாளை இவர்கள் இருவரும் தங்களுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:பாராலிம்பிக் படகுப்போட்டி : அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்திய வீராங்கனை..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget