மேலும் அறிய

Lovlina Borgohain DSP: குத்துச்சண்டை டூ டிஎஸ்பி.. ஒலிம்பிக் தங்கம் மீது குறையாத வெறி - லோவ்லினா கதை!

அசாம் மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா பார்கோயின் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை  69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் பங்கேற்றார். இந்த எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடிய லோவ்லினா பார்கோயின் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியா வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினாவிற்கு பல்வேறு பரிசுகள் கிடைத்தன. குறிப்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ், லோவ்லினாவிற்கு 1 கோடி ரூபாய் பரிசை வழங்கினார். அத்துடன் லோவ்லினாவிற்கு விரைவில் டிஎஸ்பி பணி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். 

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அவருடைய பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் அசாம் மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக பொறுப்பு ஏற்று கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் லோவ்லினாவிற்கு டிஎஸ்பி பணி வழங்கப்பட்டதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் டிஎஸ்பியாக பதவியேற்று கொண்டார்.  அதன்பின்னர் அவர், "எனக்கு இந்த கௌரவத்தை வழங்கிய முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முக்கியமான லட்சியம் குறிக்கோள் ஆகிய அனைத்தும் ஒன்றே ஒன்று தான். விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்" எனக் கூறியுள்ளார். 

ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் டிஎஸ்பி பதவி பெற்றார். தற்போது அவருக்கு பிறகு லோவ்லினா டிஎஸ்பி பதவியை பெற்றுள்ளார். லோவ்லினா பார்கோயின் 2 முறை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் 2 முறை ஆசிய குத்துச்சண்டை போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவற்றுடன் சேர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளதால் 23 வயதான இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பெருமை:

 

முன்னதாக லோவ்லினாவின் டோக்கியோ ஒலிம்பிக் அரை இறுதி போட்டியை காண, அசாம் சட்டப்பேரவை 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேர்வை சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இந்திய ஓபன் பேட்மிண்டன்: முன்னணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget